Monday, October 8, 2018

L A N A K A J U M P (Continued)

L A N A K A     J U M P (Continued)

ராஜு தன்னுடைய  ஸ்ரீலங்கா ட்ரிப்  ரொம்பவும் ஜாலியாகவும் அலுப்பு தட்டாமலும் இருக்கவேண்டி  எல்லா எற்பாடுகளையும் ரொம்பவும் அக்கறையோடு செய்திருந்தான். எதுவும் மறக்காம இருக்கவும், கடைசி நிமிஷ சொதப்பல்கள் எதுவும் இருக்க கூடாது  என்பதற்காக ஒரு பாயிண்ட் கூட விடாம  எவ்வளவு அற்ப விஷயமானாலும் சரி எல்லாவற்றையும் தன் பாக்கெட் டைரியில் குறிச்சி வெச்சிருந்தான். அன்றைக்கு வீட்ல சமையல் எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டான். அதான் ஏகப்பட்ட food டெலிவரி app  இருக்கே.  ராஜு wife அவங்களுக்கு வேண்டிய ஐட்டம்ஸ் எல்லாம் கச்சிதமா எடுத்து பேக் பண்ணி வச்சிக்கிட்டாங்க. ராஜுவும் கடைசியா ஒரு 15 தடையாவது repack பண்ணி அவன் மனைவியை விட கொஞ்சம் பெரிய பேக்கிங்ல முடித்தான். ஒரு நாளைக்கு ரெண்டு டிரஸ் வீதம் ஒரு பத்து டிரஸ் எடுத்தது வைத்திருந்தான். ஏன்னா, விதம் விதமா போட்டோஸ் எடுக்கணுமாம். ராஜுவின் மனைவி  tour ப்ரோக்ராம் கைல வச்சிக்கிட்டு ஏங்க  இவ்வளவு தூக்கிட்டு வரீங்க , நீங்க இந்த tour ப்ரோக்ராம்  எவ்வளவு clear ah  போட்டுருக்காங்க. அது பிரகாரம் நம்மளுக்கு மொத்தமே 6 டிரஸ் தான் மாக்ஸிமம் தேவை, அப்பிடின்னு சொல்லவே  ராஜு  அரை மனசோடு மீண்டும் 16 தடவையாக ரீபாக்  பண்ண வேண்டியதாயிற்று. ராஜு  shoulder bag பல பாகெட்ஸ் கொண்டது. எப்போவோ துபாய்ல வாங்கியது. அதில எல்லா papers , டாக்குமெண்ட்ஸ், பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் மொபைல், ear பிளக் தவிர தனக்கு வேண்டிய ஐட்டம்ஸ் எல்லாம், ஒவொரு பாக்கெட்டிலேயும் மறக்காமல் வைத்து கொண்டான்.
"என்னங்க ..டாக்ஸி சொல்லிட்டீங்களா"ன்னு கேட்கவே, ராஜு டாக்ஸி அட்வான்ஸ் புக் பண்ணினான். tour மேனேஜர் சொன்ன மாதிரியே போன் பண்ணி ஏர்போர்ட்ல எங்க மீட் பண்ணணும்ன்னு விவரமா சொன்னாரு.
ராஜுவிற்கு சூப்பரா வெளிநாடு போற குஷி கிளம்பியது. டாக்ஸி சொன்ன நேரத்துக்கு வந்தது. ராஜு மொபைல்ல   டிராபிக் எங்கேய எல்லாம் இருக்குனு வந்தது. ஏர்போர்ட் சைடுல ரொம்ப டிராபிக் இருக்குனு அனௌன்ஸ்மென்ட் வரவே ராஜு  டாக்ஸி டிரைவர் கிட்ட , சார் நீங்க வேற வழியா போங்கன்னு சொல்ல , அதுக்கு அவரு "அதெல்லாம் ஒண்ணும்  இல்ல சார், இப்போ நா அங்கிருந்துதான் வரேன் சார் சவாரி விட்டுட்டு" அப்பிடின்னான். டாக்ஸி airport  நோக்கி சென்றது. இரவு மணி 11.30 இருக்கும். ஏர்போர்ட் நெருங்க நெருங்க செம்ம டிராபிக். இன்ச் இன்ச் தா வண்டிகள் நகர்ந்தது. பொதுவா ராஜு வீட்லேருந்து ஏர்போர்டைர்போர்ட்க்கு போவதற்கு அதிக பட்சம் 45 நிமிஷம்தான்  ஆகும். இன்னிக்குனு பார்த்து 1.30 ஆகியும் வண்டி இன்னும் ஏர்போர்ட் கண்ணிலேயே காணல. ராஜு டாக்ஸி டிரைவரிடம் , "நான் தான் அப்போவே சொன்னேனே, இந்த ரூட் வேண்டாம்னு, இப்போ பாருங்க எவ்வளவு ட்ராபிக்  இந்த ராத்திரில .." அப்பிடின்னு புலம்ப  ஆரம்பித்தான் மெள்ள. அதற்கு  டிரைவர் சார், நீங்க ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காதிங்க சார் னு சொல்லி, கண் இமைக்கும் நேரத்தில, டாக்ஸியை சும்மா சடார்னு லேபிட் சைடில் திருப்பி போக ஆரம்பித்தான். இந்த பக்கம்  போனா  ஈஸி  சார், டிராபிக் இருக்காதுன்னு சொல்லிக்கொண்டே இருக்கிற சந்து போந்து எல்லாம்வற்றிலும் வண்டியை திருப்பி, "பல்லாவரம் by நைட்" பூரா காண்பித்தான். ஒரு மாதிரி டாக்ஸி ஏர்போர்ட் பக்கம் மெயின் ரோடுக்கு  வந்தது. ராஜூக்கு பெரு மூச்சு அப்போ தான்  வந்தது. மீண்டும்  ராஜு முகத்தில் குஷி. டாக்ஸி விமான புறப்பாடு கேட் கிட்ட நின்றது. ராஜு luggage  எல்லாம் ஒழுங்கா இறக்கி டாக்ஸி டிரைவர்யை அனுப்புவிட்டு, மனைவி கிட்ட baggage பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு, தான் ட்ராலி எடுக்க சென்றான். நல்ல வேளையாக ஒரு ட்ராலி பக்கத்திலேயே இருக்க அதில் luggageயை தூக்கி வைத்தான். ட்ராலி தள்ளலாம்னு ட்ரை பண்ணும் பொது, ட்ராலி நாலா பக்கமும் சென்றது ..இது என்னடா கஷ்ட காலம் னு பார்த்தால் , ட்ராலியில் வீல் நான்கும் ஒவொரு பக்கமும் சென்றது..இதெல்லாம் வேலைக்கு  ஆகாதுன்னு சொல்லி அவர்களுடைய ட்ராலிbag யை அவர்களே இழுத்து கொண்டு சென்று நுழை வாயில் செக்யூரிட்டி கிட்ட வந்தார்கள். அவனிடம் பாஸ்போர்ட், டிக்கெட் காண்பித்தால்தான் உள்ளே போக முடியும். ராஜு உடனே முன் ஜாக்கிரதையாக தன்னுடைய பல பாக்கெட்டுகள் கொண்ட ஜிப் பைக்கில் கை விட்டு வேண்டிய டாக்குமெண்ட்ஸ் எடுக்கலாம்னு ஒவொரு ஜிப்பாக திறந்து  பார்க்கும் நேரத்திற்குள் செக்யூரிட்டி கிட்ட ராஜு வந்தான்.  அவன் ஹிந்தியில் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கேட்க, ராஜு தனக்கு தெரிந்த 'ஏக் gau மெய்ன் ஏக் கிஸ்ஸான்  ரகு தாத்தா" ஹிந்தில ஏதோ சொல்ல போக அந்த செக்யூரிட்டி கடுப்பாகி ராஜூவை ஓரம் கட்டினான். ராஜு கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டான். இப்போது HOD  தலையிட வேண்டிய கட்டம். உடனே ராஜு, "நான் தான் வச்சிருக்கேன், எனக்கு தெரியும் எந்த பொக்கெட்"ன்னு சொல்லி மீண்டும் ஒவொரு ஜிப்பும் ஓப்பன் ஆகியது.  அவன் படுகிற அவஸ்த்தையை பார்த்த  மனைவி  சும்மா அனாவசியமா அந்த baga  பிடுங்கி  முதல் பாக்கெட் ஓபன் பண்ணி டாக்குமெண்ட்ஸ் கைல எடுத்து ராஜூவை ஒரு கடுப்பு பார்வை பார்த்து, செக்யூரிட்டியிடம்  , பாமா விஜயம் சௌகார் ஜானகி விஷாரத் ஹிந்தி பேசுற  மாதிரி அலட்சியமாக  ஹிந்தில ஏதோ பேசபோக  உடனே அந்த, செக்யூரிட்டி ராஜூவை பார்த்து கேவலமா சிரித்துக்கொண்டே ஒரு salute அடித்து அவர்களை உள்ளே விட்டான். ராஜுவுக்கு தெரியும் தன் ஹிந்தி  திருத்தணி தாண்டாதுன்னு ஆனாக்க இப்போ தான் புரிஞ்சிது சென்னை ஏர்போர்ட் கூட தாண்டதுன்னு ...!! ஏனென்றால் ராஜு இந்தி prathmik எக்ஸாம்ல  fail .!!எப்பிடியோ உள்ளே வந்தாச்சு, வண்ண ஒளி மயம். ராஜு அந்த tour மேனேஜர் சொன்ன கேட் 3 கிட்டவந்து ஒரு 10 நிமிஷம் வெயிட் பண்ணும்போது ராஜுவின் மொபைல் அலறியது.  "சார், எங்கே இருக்கீங்க, நாங்க எல்லாம் கேட் 3 கிட்ட உங்களுக்காக வெயிட் பண்றோம்னு"  சொல்ல , ராஜு தானும் கேட் 3 கிட்ட தான் இருப்பதாகவும், மேனேஜர்கிட்ட, "நீங்க   எங்கே இருக்கீங்க"ன்னு கேட்டான். "கேட் 3 பக்கத்தில ஒரு காபி ஷாப் இருக்கு பாருங்க, அங்க தான் நிக்கிறோம்"னு சொல்லவே ராஜு கேட் 3 பக்கம் நோட்டம் விட, ஒரு காபி ஷாப்பையும் காணவில்லை. ராஜு மீண்டும் மேனேஜரை போனில், " சார், எங்கே இருக்கீங்க,? இங்க ஒரு காபி ஷாப் கூட இல்லையே" ன்னு கேட்க அவரு அதே பதிலா சொல்ல ராஜுக்கு கொஞ்சம் confuse ஆகியது. இந்த போன் சமாச்சாரத்தை கேட்ட மனைவி, நீங்க உள்ளே கேட் 3 கிட்ட இருக்கேனு சொல்லுங்க அப்படினு சொல்ல ராஜுவிற்கு, ஆமா இல்ல ,,மறுபடியும் மனஜேர்க்கு, " சார்,, நாங்க கேட் 3 உள்ள இருக்கோம்"னு சொல்ல மேனேஜர்  கொஞ்சம் சூடாக, "உங்கள வெளி பக்கம் கேட் 3 பக்கத்தில இருக்கிற  காபி ஷாப் கிட்ட நிக்கணும்னு  சொன்னேனே சார்,,பரவ இல்ல நீங்க மத்த பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு departure கேட் கிட்ட இருங்க"னு சொல்லி " ஓகே சார், சி யூ தேர்" ன்னுசொல்லி போன் அடங்கியது. அடுத்த கட்டம், செக் இன் பண்ணனும். அங்கேயும் கொஞ்சம் சிக்கல் . வேற ஒண் ணும்  இல்ல. சீட் நம்பர் அடுத்து அடுத்து  கிடைக்கல. ஏன்னா குரூப் டிக்கெட்டாம், நீங்களே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க கவுண்டர் ல இருக்கிற ஸ்ரீலங்கன் கண்மணிகள். ராஜுவும்,  "ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் நம்ப ஆளுங்க தான் ..மாத்தி உக்காந்துக்கலாம்"ன்னு சொல்லி ஒரு சமாளிப்பு.  இரவு  மணி 2.30, ராஜுவிற்கு பசி அடிவயத்தை கிள்ளியது. சரி, ஏதாவது சாப்பிடலாம்னா, இந்த சமயத்தில ஏதாவது தின்னு வயறு அப்புறம் கட முட ஆச்சுன்னா ..ஐயோ சாமி வேண்டப்பா அப்பிடின்னு சமாதான படுத்திக்கொண்டான். 
ராஜு நிறைய வெளிநாடு பயணம் சென்றிருந்ததால் ஒண்ணும் டென்ஷன் இல்லாம  இருந்தான். விடிகாலை 3.35கு flight ஆனதால் தூக்கம் கெட்டது . மேனேஜர்  குரூப்புடன் வரும் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். சிறுவர் முதல் ராஜூவை விட சீனியர் வரை பல தரப்பட்ட நண்பர்கள் ஆனார்கள். flight போர்டிங் அனௌன்ஸ்மென்ட் வரவே, எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு வரிசையில் முன்னேறினார்கள். விமானம் உள்ளே கையை கூப்பியபடியே, Ayobhavan என சொல்லி விமான பணிப்பெண்கள் அவர்கள் ஸ்ரீலங்கன் நாட்டு தேசிய உடையுடன் வரவேற்றனர். ராஜுவிற்கு முன்னாடி போய்க்கொண்டிருந்த ஒரு சக குரூப் ஆளு, என்ன இவங்க நாம கட்டுற கண்டாங்கி சேலை மாதிரி இருக்குதுனு மெல்ல முணு முணுத்தாங்க. குரூப் மெம்பெர்ஸ் எல்லோருக்கும் சீட் நம்பர்ஸ் தாறு மாறாக வரவே, விமானத்துக்குள் ஒரே அமளி தான். பணி பெண்கள் பார்த்தாங்க. இவங்க சண்டை ஓயாது போல. விமானம் புறப்பட போவுது , கொஞ்ச நேரம் பொறுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லி எல்லோரையும் அமைதி படுத்தினாங்க. அதிர்ஷ்டவசமாக ராஜு ஒரு சக பாசெஞ்சுருடன் லாவகமாக பேசி தனக்கும் மனைவிக்கும் பக்கத்து சீட் கிடைக்க சந்தோசமாக உட்கார்ந்து கொண்டான். ராஜுவிற்கு தூக்கம் ஒரு பக்கம், பசி ஒரு பக்கம். விமானம் வானத்தில் மேலே பறந்தது. மீண்டும் ஒரே அமளி. சீட் மாற்றி உட்கார தான். இப்பொழுது  பணி பெண்கள், breakfast கொடுக்கப்போகிறோம் சற்று சீட்டில் அமைதியாக உட்காரவும் சொல்லவே மீண்டும் silent  ஆனார்கள். இந்த சிற்றுண்டி சமாச்சாரம் கொஞ்சமும் எதிர்பார்க்காதது என்றால் நெடுந்தூரம் போகும் பயணம் இல்லவே. ராஜுக்கு கொஞ்சம் உயிர் வந்தது. ஜில்லுன்னு ஒரு காற்று மாதிரி, சில்லுன்னு  ஒரு ஸாண்டவிச் வந்தது. எல்லோருக்கும் பசி. ஒரு பத்து நிமிஷம் பேச்சு மூச்சே இல்ல. எல்லார் கவனமும் ஸாண்டவிச் தின்பதிலேயே தான். ஒரு மாதிரி அந்த கடன் முடிந்தவுடன், மீண்டும் இடத்திற்கு போட்டி ஆரம்பித்தார்கள். ஒரு 5 நிமிஷம் இருக்கும். மீண்டும் அறிவிப்பு. விமானம் லாண்டிங் ஆக  போகுது, தங்கள் இருக்கையில் அமருமாறு..!! மொத்த பயண நேரமே 55 நிமிஷம் தான். அதுக்கு தான் இவ்வளவு அமர்க்களம். எல்லோர் கண்ணும் ரத்த சிவப்பாக இருந்தது சரியாய் தூக்கம் இல்லாமல். விமானம் ஸ்ரீலங்கா பண்டாரநாயகா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இறங்கி  நின்றது. மறுபடியும் இறங்க வேண்டிய அமளி . கடைசிவரை யாரும் அவங்க சீட்ல உட்காரலை.

ஹையா!! , ராஜிவிற்கு ஒரே குஷி..மனைவி கையை அன்புடன் பிடித்துக்கொண்டு இமிகிரேஷன் கவுண்டர்க்கு சென்றான். மேனேஜர் எல்லோருக்கும் அன்புடன் instructions கொடுத்துக்கொண்டே வந்தார். என்ன ஆச்சர்யம். இந்த இமிகிரேஷன் ஒரு தொல்லையும் இல்லாமல் 10 நிமிடங்களில் முடிந்து baggae எடுக்க முனைந்தான். அந்த ஹாலில் நெறய டூட்டி பிரீ கடைகள் ஆசை காட்டின . அங்கேயம் டூட்டி பிரீ டாஸ்மாக் கடைக்கு மாத்திரம் செம்ம கும்பல். ஒன்று வாங்கினால் இனொன்று free  என்று போட்டிருந்தது. அதான்  ஒரே மக்கள் கூட்டம் ஈ மாதிரி. மற்ற கடைகள் எல்லாம் தூங்கி வழிந்தது.மேனேஜர் நம்ம ஆளுங்கள பார்த்து சிரித்துக்கொண்டே , "இப்போ எதையும் வாங்காதீங்க , திரும்பி return  ஆகும் போது நிதானமா வாங்கிக்கலாம்"னு சொல்லவே, சில மக்கள் அறுந்த முகத்துடன் வெளியேறினார்கள். 
இளம் காலை . சில்லென்ற மிதமான ஸ்ரீலங்கா காற்று. எங்களை வரவேற்க, ராஜ பக்க்ஷே வருவாரோன்னு எல்லோரும் தமாஷாக பேசிக்கொண்டிருக்கும் போது , சிரித்த முகத்துடன், முத்தையா முரளிதரன் ஜாடையில் இனிய முகத்துடன், "வணக்கம்...ஆயோபாவன்" ன்னு எங்களுடன்  ஸ்ரீலங்காவை சுற்றி காண்பிக்க வேண்டி வந்தவர் , பெயர் நளின் குணசேகரா .அழகான ஸ்ரீலங்கா பெயர். கொச்சை தமிழும் மிச்சம் ஆங்கிலமும் பேச முயற்சித்தார். எல்லோரையும் சொகுசு பஸ்சில் உட்கார வைக்க வண்டி புறப்பட்டது. ஒரு 5 நிமிஷம் இருக்கும், பஸ் மெயின் ரோடு கூட வந்து இருக்காது. நளின் கையில் மைக் வைத்துக்கொண்டு வெல்கம் டு ஸ்ரீலங்கா என்று சொல்ல திரும்பினார் . பஸ்சில் பேச்சு மூச்சே இல்ல. எல்லோரும், ஒருவர் மேல சாய்ந்துகொண்டும், பின்னாடி சாய்ந்துகொண்டும் ஒரே " கொர் ..கொர் ..." தூங்கி விட்டார்கள். ராஜு வும் அப்படியே மனைவியின் மீது சயனிச்சான். 

ஸ்ரீலங்கா ஒரு ரம்மியமான  கேரளா.  வளைந்து வளைந்து சென்றது அகலமில்லாத ரோடு . முதல் ஹால்ட் breakfast. ஒரு இந்தியன் ஹோடேலின்முன் பஸ் நின்றது. பஸ்ஸில் வந்த பாதி பேர் அவசரம் அவசரமாக வாஷ் ரூம்மை நோக்கி ஓடினார்கள். மற்றவர்கள் பார்க்க அருமையாக இருந்த கல் இட்லி,  தடியான தோசை மற்றும் சின்ன பாறாங்கல் போல் தோற்றமளித்த வடை போன்ற ஒரு வஸ்து, சாம்பார் மாதிரி ஒரு சைடு டிஷ், சிலோன் பரோட்டா  வைத்திருந்தாலும், மக்கள் பசியினால் ஒரு கமெண்டும் அடிக்காமல் வயிறார சாப்பிட்டார்கள். நளின் எல்லோரிடமும் அன்றைய புரோக்ராம் சொல்லிக்கொண்டே போனாரு. 
 
அன்றைய ப்ரோக்ராம் முடிந்த பிறகுதான் ஹோட்டல் செக் இன் என்று tour மேனேஜர் கூறவே, எல்லோரும் ரொம்பவும் களைத்து போயிவிட்டார்கள். மேனேஜர், இன்றைக்கு மாத்திரம் தான் இந்த மாதிரி, மற்ற நாட்களில் இந்த மாதிரி இருக்காது, ஏனென்றால், நம்முடைய ஹோட்டல்  கடைசியில் இருப்பதாலும், நம்ம பார்க்க வேண்டிய இடங்கள் முன்னாடி இருப்பதாலும் இந்த ஏற்பாடு  என்று சமாதானம் 
சொன்னாரு. ஸ்ரீலங்காவில் நாம் பார்க்கவேண்டிய ஒவொரு இடமும் வெகு தூரத்தில் இருப்பதால் பிரயாண டைம் கொஞ்சம் ஜாஸ்தி எடுக்கும். போகும் வழியில், எழில் கொஞ்சும் மலை பிரதேசம். அங்கு உள்ள டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி பார்த்துவிட்டு, மதியம் சாப்பாட்டுக்கு பஸ்  ஒரு ஹோட்டல் முன் நின்றது. வெகு விமரிசையான மதிய உணவு. சூப்பர் ஸெல்ப் சர்விங் மெனு . கூட  வந்த ஒரு தம்பதியினர்தான் கொண்டுவந்திருந்த கை பையில் யாருக்கும் தெரியாமல்  பிரட், ஜாம், bun , பழங்கள் போன்றவற்றை அமுக்கி வைத்துக்கொண்டார்கள். இதை ராஜு கவனிக்கவே, ரொம்பவும் சாமர்த்தியமாக நீங்க கூட எடுத்துக்கோங்க சார், வழியில் சாப்பிடலாம்னு தன் அல்ப்ப தனத்தை வெளிப்படுத்தினாங்க. 
அவங்களை பார்த்த வேறு பேமிலி, தாங்களும் எடுத்து வைத்து கொண்டார்கள் பகிரங்கமாக. ஹோட்டல் ஆட்கள் அவங்களை கண்டும் கண்டுக்காம இருந்தார்கள். 
மற்ற நன்கு நாட்களில் ரம்போட நீர் விழுச்சி, யானைகள் சரணாலயம்  , ஆமைகள் வளர்ப்பு, புத்தர் கோவில், கதிர்காமம் முருகன் கோவில், ஆஞ்சநேயர் கோவில்,  ஹெர்பல் கார்டன், சீதா அசோகா வன வாசம் ,கொழும்பு ஷாப்பிங் இப்பிடி பல முக்கியமான இடங்களை மிகவும் சிரத்தையுடன் ஸ்ரீலங்கா நண்பர் பொறுமையாக காண்பித்து அந்தந்த இடங்களின் பெருமைகளை பற்றியும் விலா  வாரியாக விளக்கினார். இதுல கதிர்காமம் முருகன் கோவிலை பற்றி இங்கே சுவாரசியமான தகவல் சொல்லியே ஆகணும். அந்த கோவிலுக்கு சென்றிந்தபோது, ஸ்வாமியின் சன்னதிக்கு திரை போட்டிருந்தது. அர்ச்சனை செய்யும்  குருக்கள் உற்சவ மூர்த்தியை விட சிறிய சைஸில் இருந்தார்!! அவர் கூறிய வரலாறு என்னவென்றால், இந்த முருகன் சந்நிதி விசாக மாதம்  செவ்வாய் கிழமை மட்டும்  தான் திரை விலக்கி தீபாராதனை நடைபெறும் என்று  சொன்னார்.  அதேமாதிரி புத்தர் கோவிலில் இருக்கும்  மகா புத்தரின் பல் பக்தர்களின் பார்வைக்கு மாதம் ஒரு முறை தான் தெரியும் என சொன்னார்கள்.
இப்பிடியாக, மேலும் பல சுவாரசியமான விஷயங்களை ராஜு அண்ட் கம்பெனி  பார்த்து ரசித்தார்கள். . கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடு  என ஸ்ரீலங்காவை  எல்லோரும் ஒரு மனதாக  புகழ்ந்தார்கள். சும்மா சொல்ல  கூடாது. ஸ்ரீலங்கா மிகவும் சுத்தமாகவும் , சுகாதாரமானதாவும், toursit friendly யாகவும் இருக்கிறது. வாகனங்கள் காதை பிளக்கும் அளவுக்கு ஒலி எழுப்பவில்லை. ராஜுவிற்கும் அவன் மனைவிக்கும் இவ்வளவு சின்ன நாடு, எப்பிடி வைத்திருக்காங்க ...ஹும் ...நம்ம சென்னையை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பிடின்னு மனசு வேதனை பட்டாங்க . விமானம் சிங்கார சென்னை வந்து அடைந்த பொழுது முதல் பிரச்சினை lauggage சமயத்திற்கு வராது, இமிகிரேஷன்ல ஒரேடியா வரிசை, டாக்ஸி பிடிக்கும் படலம் , அப்புறம் டிராபிக் ஜாம் , noise  pollution  இப்பிடிபட்ட பிரச்சினைகள்  ராஜுவின் இனிமையான ஸ்ரீலங்கா பயண அனுபவங்களில் அடிபட்டு போனது. !!!.
                                                     *********************
                                               - எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்   


















******************************************************************************




No comments:

Post a Comment