Monday, August 5, 2019

மொறு மொறு கொசுறு

                                                                 மொறு மொறு  கொசுறு

இந்த கதையில் ராஜு வாழக்கையில் சந்தித்த ஒரு வித்தியாசமான கேரக்டர். அவங்க எப்படி  வித்யாசமானவங்கன்னு பார்க்கலாமா. இவங்க பெயர்  கோகிலா. இவங்க மற்ற பெண்களைப்போலவே தான் இருப்பாங்க. ஆனால் ஒரு  தமாஷான  அல்லது விதியாசமான  குணாதிசியத்தை கொண்டவங்க. கோகிலாவுக்கு  ஓரளவுக்கு தான் படிப்பு.  ஆனால் ஸ்ட்ரீட் ஸ்மார்ட், எந்த வேலை கொடுத்தாலும் பம்பரமாக சுழன்று செய்வாங்க, வீட்டு வேலையிலிருந்து வெளி வேலை வரை, assaultஆக  செய்வாங்க. ரொம்பவும் பேச்சு சாமர்த்தியம், கடைக்கு  போனால் பேரம் பண்ணாமல் ஒரு சாமானும் வாங்கமாட்டாங்க.

இதிலென்ன  வித்தியாசம் இருக்குனு தோணும். மேட்டர் வெறும் பேரம் பண்ணைகூடிய  ஷாப்பிங் இல்ல. இவங்களுக்கு ஸ்னாக்ஸ் கடைக்கு போகிறது என்றால்  ரொம்பப்பிடிக்கும்.  நம  நமனு  கை  அரிக்கும். நாக்கிலே  ஜொள்ளு ஊரும். அதை குறித்து ஒரு சம்பவத்தை பாக்கலாமா. ஒரு சமயம் ஸ்ரீனிவாசா போளி ஸ்டாலுக்கு போய் இருந்தாங்க. அங்கே சரியான கும்பல் நெறிச்சி தள்ளியது  . இவங்க  பந்தாவாக கும்பலை தள்ளிக்கொண்டு முன்னாடி போய் நின்னாங்க.
அங்க இருக்கிற கர கர மொற மொற  பண்டங்களையெல்லாம் பொறுமையா ஒரு நோட்டம் விட்டாங்க . சரி , இனிக்கிக்கு ஒரு கை  பார்க்க வேண்டியது தான்னு வயிறு சொல்லியது. அவங்க பக்கத்தில ஒரு பெரிய கடாயில வெங்காய தூள் பகோடா கம கமான்னு  ரெடி ஆகிக்கொண்டிருந்தது. அந்த பக்கோடாவை மாஸ்டர் லாவகமாக பக்கத்திலிருந்த எண்ணெய் வடிகட்டியில் போட்டுக்கொண்டிருந்தாரு .உடனே நம்ப கொசுறு  கோகிலா, "இந்தாங்க, கொஞ்சம் கொசுறு கொடுங்க, சரியா வெந்துருக்கானு பாக்குறேன், நெறய வாங்க வேண்டி இருக்குது"னு  கைய நீட்டினாங்க. அதுக்கு மாஸ்டர் அவங்களை  ஏற இறங்க ஒரு முறை பார்த்துவி ட்டு, "எல்லாம் கண்டிஷனா தா இருக்கும். நீங்க வேண்டுமானா சாம்பிள் பாருங்க"ன்னு அந்த ஜாலி கரண்டியிலிருந்து ஒரு 50 கிராம் சுட சுட பக்கோடாவை கோகிலா கையில கொடுத்தாரு. கோகிலாவிற்கு பழம் நழுவி பாலில்  விழுந்து அங்கிருந்து வாயில் விழுந்த கதையாய் ஆனது . கோகிலா உடனே, " போறும்ப்பா, கொஞ்சம் போதும், ஒரே எண்ணெய்" அப்பிடின்னு சொல்லிக்கொண்டே அத்தனை பக்கோடாவையும் பக்கத்திலிருந்த நியூஸ் பேப்பரில் வாங்கிகொண்டாங்க. சரி, இவங்க சாப்பிட்டு டேஸ்ட் எப்பிடி இருக்குனு சொல்ல போறாங்கன்னு  கோகிலா முகத்தையே  பார்த்து கொண்டிருக்க, நம்ப ஆளு அந்த பக்கோடாவை சமர்த்தியமா  பொட்டலாமா மடிச்சு,  கையோடு கொண்டு வந்திருந்த பையில பத்திரமா வச்சிக்கிட்டாங்க. "இல்ல, வயிறு, ஒரு மாதிரி இருக்கு, அதான் சாப்பிடலன்னு"  ஒரு சமாளிப்பு . மாஸ்டர் ஒரு மாதிரி அவங்கள பாக்கிறதுக்குள்ள, கோகிலா கவுண்ட்டர் பக்கம் வேகமாக போனாங்க. இன்னிக்கி கொஞ்சம் சிப்ஸ் வாங்கலாம்னு ஒரு ஐடியா தோணவே, கடை காரரை பார்த்து, "இந்த வாழைக்காய் சிப்ஸ் உப்பு போட்டதா? இல்ல காராமா ?"னு கேக்கவே, அவரும்ன கொஞ்சம் சிப்ஸ் கையில் கொடுத்து, "உப்பு போட்டதுதான் பாருங்க"ன்னு காண்பிக்கவே, "கொஞ்சம் சாம்பிள் கொடுங்க பாக்கலாம்"னு கேட்டாங்க.
salted  சிப்ஸ் இவங்க கைக்கு இடம்மாறியது. அதை வாயில் போட்டுகொண்டு, "ரொம்ப உப்பாக இருக்கு, கொஞ்சம் காரம் போட்டது கொடுங்க எப்பிடி இருக்குன்னு பாக்கலாம்?"னு கேட்டாங்க.  மீணடும் சிப்ஸ் கை  மாற்றம். கொஞ்சம் வாயில் போட்டு கொண்டு, "பரவாஇல்லை   , சூடா  இல்லயே ..?இன்னிக்கி போட்டதா"னு கேட்டாங்க. அந்த பையன் இவங்கள கொஞ்சம் உஷாரா பார்த்து, "மதியம் தான் போட்டது, இன்னும் சூடு கூட ஆறலை பாருங்க"ன்னு சொல்லி, மேலும் கொஞ்சம் கார சிப்ஸ் கைல கொடுத்தான். அட, இது நம்ப கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லையே என்று மனசுக்குள் ஒரு அல்ப சந்தோசம். "எவ்வளவுங்க  வேணும், ஒரு கிலோவா ரெண்டுங்களா" என்று கேக்கவே, கோகிலா உடனே சுதாரித்துக்கொண்டு. " இப்போ ஒரு 100 கிராம் கொடுங்க, வீட்ல கேட்டுட்டு மேல வாங்கிக்கிறேன்"னு சொல்லி நிலைமை அட்ஜஸ்ட் பண்ணினாங்க. அவன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே 100 கிராம் சிப்ஸ் எடை போட போனான். கோகிலா சும்மா இருப்பாங்களா , ..100 கிராம் சிப்ஸ், 100 கிலோ மாதிரி நினைச்சுகிட்டு எடை சரியாய் இருக்கானு பார்த்துக்கொண்டே இருக்கையில் அவன் சரியாய் 100 கிராம் அளந்து போட, கோகிலா அவனை இடை மறித்து, "இன்னும் ரெண்டு கொசுறு போடுங்க... எல்லாம் பொடிஞ்சு இருக்கு" அப்பிடினாங்க. "40 ரூபாய் கொடுங்க சில்லறையா, இல்லேன்னா ஒரு பத்து ரூபாய்க்கு பர்பி வாங்கிக்கோங்க" அப்பிடினான். "50 ரூபாய் மொத்தம் ஆகிடும். என்கிட்ட வேற சிலரை இல்லை". கோகிலா ரொம்ப சாமர்த்தியமா , "என்கிட்ட 500 ரூபாய் தா இருக்கு, வேற இல்லையே, என்ன செய்ய, சிப்ஸ் திருப்பி எடுத்துக்கோங்க" ன்னு ஒரு அலட்சிய பார்வையோடு சொல்லவே, அதற்கு, "நீங்க சில்லறை மாற்றி  திரும்பி போகும் போது  கொடுங்க"ன்னு அவங்களை கழட்டி விட பார்த்தான். நஷ்டம் வெறும்  100 கிராம் மட்டும் தான்னு அவன் கணக்கு , இல்லேன்னா  இந்த அம்மா free   சாம்பிள்லேய கடையே காலி பண்ணிடு வாங்க போலன்னு. கோகிலா மனதில் ஒரேடியா  வெற்றிப்புன்னகை . இன்னிக்கி யார் முகத்தில முழிச்சமோ   ..நல்ல லாபம். சரி, நேர வீட்டுக்கு நடையை கட்ட வேண்டியது தா நினைத்துக்கொண்டே நகரும் போது தாகம் தொண்டையை வறட்டவே , ஏதாவது கலர் இல்ல சர்பத் குடிக்கலாம்னு ஐடியா தோன்றியது. சொல்லி வெச்ச மாதிரி கொஞ்சம் தள்ளி ஒரு வண்டியில் இளநீரும் மற்றும் தேங்க பூவும் ஒருத்தர் கூவி கொண்டிருந்தாரு. கோகிலாவிற்கு அதை கண்டதும், அவங்களுடைய விபரீத ஆசை மீண்டும் காஞ்சனா 3 டான்ஸ் ஆடியது. தானாகவே அந்த கடை காரனிடம் தன உடல் பொருள் ஆவி எல்லாம் தள்ளிக்கொண்டு போனது..
ஒரு விதமான மோகத்தில் கட்டுண்டவள்  போல சென்றாள் . தான் ஆடாவிட்டாலும் தன்தசை ஆடும்னு சொல்றபோல, அவங்க மனம் அநத தேங்காய் பூவின் மீது ஆசை  விழுந்தது. வழக்கம்போல் அவனிடம் சென்று,  "இளநீர் எப்பிடிப்பா?" னு கேட்டுக்கொண்டே, "அது என்னப்பா வெள்ளையா இருக்கே, தேங்க மேல" னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டாள். அவன் இதுக்கு தான்  காத்திருந்த மாதிரி, "அது தேங்க பூம்மா, ரொம்ப ருசியா இனிப்பா  இருக்கும்"னு சொல்லிக்கொண்டே இளநீர்ரை வெட்ட போனான். "ஒ, அப்பிடியா நான் சாப்பிட்டதே இல்லை" என தன்  அடுத்த ப்ரொஜெக்ட்க்கு ஒரு முஸ்தீபு போட்டாள். "அப்போ கொஞ்சம் வெட்டி  கொடு.. சாப்பிட்டு பாக்கலாம், உடம்புக்கு நல்லதுன்னு வேற சொல்றிங்க."..இத கேட்டு தனக்கு, ஓஹோ ரெண்டு வியாபாரம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்  டோய் இன்னிக்கி என மனசுக்குள்ள சந்தோஷ பட்டு ஒரு கீத்து தேங்காய்  பத்தை மாதிரி நறுக்கி கொடுத்தான். அதை சாப்பிட்டுவிட்டு , "அடே டே , ரொம்ப நல்ல இருக்கே, இளநீர் வெட்ட வேண்டாம் , தேங்காய் பூவே வாங்கலாம்னு நினைக்கிறன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கைப்பையிலிருந்த மொபைல் போனை கையில் எடுத்தது, "இருப்பா , கொஞ்சம் வீட்ல கேக்குறேன், எவ்வளவு வேணும்னு" அப்பிடின்னு சொல்லி, கொஞ்சம் தள்ளி போய் பேசுகிற  மாதிரி பாசாங்கு செய்துட்டு இருந்தாங்க. இதறக்கிடையில், கடைக்கு வியாபாரம் பெருகவே, அவனது கவனம் வேறு பக்கம் திரும்பியது. இது தான் சாக்கு என்று  அங்கிருந்து கோகிலா நழுவினாள். இவ்வாறாக கோகிலாவின் வாழ்க்கை  கொசுறும் வயிறுமாக நகர்ந்தது..

காலப்போக்கில் , கோகிலாவிற்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியது. அவர்கள் பெற்றோர்களுக்கு அவளுடைய அந்த கொசுறு வியாதி கொஞ்சம் கூட தெரியாது. மாப்பிள்ளை மனோகருக்கு தங்கள் பெண்ணின் பெருமைகளை விலா  வாரியாக சொல்ல, பிள்ளை வீட்டார், எங்களுக்கு பணம் காசு எல்லாம் வேண்டாம் நல்லா குடும்பத்தை  சாத்தியமாக நடத்துறே பெண்ணே வேண்டும் என்று சொன்னார்கள்..ஆஹா, ஜாடிக்கு ஏத்த மூடி சரியாய் , என கோகிலா மனதுக்குள் சந்தோச பட்டாள். காசிக்கு போனாலும் கர்மம் விடாது போல, கல்யாணம் ஆகியும் அவளுடைய அந்த கொசுறு புத்தி கொஞ்சம் கூட மாறவே இல்லை. மனோகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய அந்த மனோ வியாதி பு ரிந்தது. இருந்தாலும் கண்டுக்காம விட்டுடான். எதிர்பார்த்த மாதிரி, சரியாய் ஒரு வருடம் கழித்து கோகிலா பிரசவம்..ஆஸ்பத்திரியில் குறுக்கும் நெடுக்குமாக மனோகர் மற்றும் அனைவரும் கவலையோடு இருந்தார்கள். பிரசவம் எந்த நிமிடத்திலும் ஆகலாம். சரியாய், 5 நிமிடம் கழித்து , ரூமிலிருந்து குழந்தை அழும் சப்தம் கேக்கவே, எல்லோரும் டாக்டர் எப்போ ரூமிலிருந்து வருவாங்க னு காத்திருக்கும் போது , நர்ஸ்  கையில் குழந்தையுடன் ஓடி வந்து,  "பொண்ணு பொறந்திருக்கு" னு சொல்லவே எல்லோரும் ரொம்ப சந்தோச பட்டார்கள் . மனோகரின் முகத்தில்  ஒரே சந்தோசம். இது நடந்து ஒரு 2 நிமிடம் ஆகி இருக்கும் மற்றொரு நர்ஸ் கையில் இன்னொரு குழந்தையுடன் வந்து, "ட்வின்ஸ்ங்க பையன்"னு சொன்னாங்க, எல்லோருக்கும் ரெட்டை சந்தோசம். அட அமாம், கொசுறு கோகிலாவிற்கு, குழந்தையும் கொசுறாக  கிடைத்தது. கோகிலா ரொம்ப சநதோஷமாய் மனோகரை பார்த்து கொசுரித்தாள் !!! .

எண்ணம், எழுத்து - ரவிசங்கர்

*********************************************************************************








.


   

No comments:

Post a Comment