Monday, October 8, 2018

கருப்பு கண்ணாடி


                                                           கருப்பு கண்ணாடி

 நீங்கள் மேற்கொண்டு படிக்கப்போவது இதுவரை நீங்கள் படித்து வந்த ஹாஸ்ய கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தை கொண்ட ஒரு வித்யாசமான கதை. தொடருங்கள் திறந்த மனதுடன்....!!

 ராஜுவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்ட நண்பர்கள் உண்டு. எல்லோரிடமும் அவர்கள் வயதிற்கு ஏற்றவாறு பழகும் குணம் உடையவன். அப்பிடிப்பட்ட இளைஞர்  நண்பர்களில் வித்யாசமான துடிப்புள்ள  நண்பன் உமேஷ். இவனுக்கும் ராஜுவிற்கும் குறைந்த  பட்சம் 40 வயசு  வித்தியாசம் இருக்கும். இவர்கள் நட்பு அறிமுகம் ஆனதே ரொம்ப சுவாரசியம். இவர்கள் ஒரு பிசினஸ் மீட்டிங்கில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது, உமேஷ் ஒரு enterprising கேரக்டர். மீட்டிங்கில் ராஜுவும்  அவன்  பக்கத்தில் அமர்ந்து இருந்த உமேஷ்சும் மாறி மாறி கேள்விகளை
கேட்டவாறு  இருந்தனர். இருவரின்  thinkingஉம்  ஒரே மாதிரி இருக்கவே இருவரும், தங்களை அறிமுகம் செய்து கொண்டு அவர்களுடைய மொபைல் நம்பர்யை exchange  செய்துகொண்டு விடை பெற்றுக்கொண்டனர். உமேஷ் போகும் போது ராஜூவை பார்த்து, "சார்.. உங்களோட பிசினஸ் approach மிகவும் practical ஆக இருக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்' என்று சொல்லி, அடுத்து எப்போது, எங்கே மீட் பண்ணலாம் என்ற விவகாரத்தை உற்சாகத்துடன் சொல்லி முடித்து விடை பெற்றான.

சொல்லியபடியே அவர்கள் இருவரும் காபி ஷாப்பில் மீட் பண்ணினார்கள். நெறய விஷயங்களை உமேஷ் .பகிர்ந்துகொண்டான். இவர்களுடைய நட்பு அடிக்கடி மீட் பண்ணும் படி நேர்ந்தது. உமேஷுக்கு  ராஜு மீது ஒரு அபிமானம் உண்டாக்கியது. ராஜூவை தன் friend , philosopher அண்ட் guide போன்று பாவித்தான். தன் பேமிலி மற்றும் தன் சொந்த விஷயங்களை பற்றி ராஜுவிடம் பகிர்ந்துகொண்டான். ராஜுவும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் கேட்டு கொண்டான். உமேஷ் ஒரு சிறந்த multi -talented இளைஞன். பரதநாட்டிய கலைஞன். அதை தவிர மற்ற விஷயத்திலும் ரொம்பவும் ஸ்மார்ட் ஆக  இருந்தான். அவனுக்கு போட்டோகிராபி கை வந்த கலை . மேலும் அவன் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜித்தன். இது போறாதுன்னு கிட்டார் வேற கற்று கொண்டு வருகிறான். நல்ல துடிப்பான எல்லோரிடமும் சகஜமாக நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஷ் பேசும் குணம் உடையவன். உமேஷுக்கு  சீனியர் சிடிஸன்ஸ்  என்றல் ரொம்ப பிடிக்கும். இது ரொம்ப வியப்பான விஷயம். நோ டவுட் உமேஷுக்கு , ராஜூவை பிடித்தது.
.

ஒரு சமயத்தில் உமேஷை அவன் பெற்றோர்கள்  கல்யாணம் பண்ணிக்கொள்ள complel பண்ணுகிறார்கள் என்று சொன்னான். . ஏனென்றால்  அவன் சென்னையில் ஒரு MNC கம்பெனியில்  நல்ல வேலையில் இருந்தான். வயது 26. இந்த கட்டத்தில் உமேஷ்  தனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என சொல்லவே, ராஜுவும்,  "ஆமா, இப்போ என்ன அவசரம், இன்னும் கொஞ்சம் வருஷம் போகலாம், நல்லா  சம்பாதித்து, உன் டான்ஸ் திறமையை வெளிப்படுத்து, வெளி நாட்டு அசைன்மெண்ட் வந்தால் நல்ல experience கிடைக்கும், நல்லா காசு சேர்க்கலாம் " அப்பிடின்னு அட்வைஸ் பண்ணினான். ஆமா, அது தான் என்  பிளான், ஆனால் ..என்று ஒரு இழு இழுத்தான் .இந்த தருணத்தில் உமேஷ்  ஒரு ரகசியமான அதிர்ச்சியான உண்மையை  ராஜுவிடம் சொன்னான். அதை கேட்ட ராஜுவிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ஆனால்  சுதாரித்துக்கொண்டு மேலும் விவரமாக கேட்டுக்கொண்டான். தனக்கு ஏன் கல்யாணத்தில் நாட்டம் இல்லை என்ற காரணத்திற்கு அவன் சொன்ன பதில் ராஜுவிற்கு இப்பொது புரிந்தது. உமேஷ் தான் ஒரு GAY எனவும், தனக்கு பெண்களிடம் கவர்ச்சி இல்லை  எனவும், தன்னால் ஒரு பெண்ணின் life கெட கூடாது என்பதற்காகவும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என கூறினான். ராஜுவிற்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் மறு பக்கம் உமேஷ் எவ்வளவு தெளிவாக பேசுகிறான் என்கிற உண்மையும் புரிந்தது. ராஜூவினால் உடனே ரெஸ்பாண்ட் பண்ண முடியவில்லை. ராஜுவின் வாழ்கை பயணத்தில் இந்த மாதிரி மக்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறான், நெறய படித்தும் இருக்கிறான். ஆனால் இதுவே முதல் தடவை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு. ராஜுவிற்கு உள்ளுர ஒரு பயம் கலந்த சந்தேகம். என்னாக்க, தன்னிடம் அபிமானம் மற்றும் கிளோஸ் ஆக இதற்கு தான் பழகுகிறானோ? ஏற்கனவே உமேஷுக்கு  சீனியர்ஸ் கண்டால் ரொம்ப பிடிக்கும். என்னடா இது புது திருப்பமாக இருக்கேன்னு யோசனை பண்ணி கொண்டிருக்கும்போது, உமேஷ், சார் நீங்க ஒண்ணும்  worry பண்ணிக்காதீங்க, நீங்க என்  அப்பா மாதிரி அப்பிடின்னு சொல்லவே, ராஜு மனசுக்குள் நிம்மதி பெரு மூச்சு விட்டான். உமேஷ், ராஜுவிடம், "நீங்க தான் சார், எப்பிடியாவது  என் parents  கிட்ட சொல்லி புரியவைக்கணும், நான் கல்யாணத்துக்கு லாயக்கு இல்லை" அப்பிடின்னு ரொம்ப கெஞ்சினான். ராஜுவும் அவனுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லணுமே என்கிற முறையில், 'இப்போது, அத பத்தி ஒன்னும் worry பண்ணிக்காதே, சமயம் வரும்  போது பார்த்துக்கலாம், இப்போதைக்கு  ஏதாவது ஸ்டராங் காரணம் சொல்லி கொஞ்சம் வருஷம் வாய்தா வாங்கிக்கோ..யோசிப்போம், எப்பிடி solve  பண்ணலாமுன்னு " அப்பிடினு சொல்லி ராஜுவும்  வாய்தா வாங்கிக்கொண்டான். உமேஷினின் பெற்றோர்கள் ரொம்பவும் ஆசாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் . அவர்களுக்கு ஒரு மகன் உமேஷும், மகள் ரசிகாவும் உள்ளனர். ரசிகாவிற்கு கல்யாணம் ஆகி, தன் கணவருடன் வெளி  நாட்டில் இருக்கிறாள் . உமேஷ் ஒரே பையன் என்பதினால் அவன் மேல் மிகவும் பாசமாக இருப்பதில்  ஆச்சர்யம் இல்லை..
அவனை மேல் படிப்பிற்காக கூட வெளி நாடு செல்ல அரை மனதுடன் சம்மதித்தார்கள். உமேஷுக்கும் ரசிகாவிற்கும் ஒரு நல்ல understanding இருந்தது, ரசிகாவும் கர்நாடக சங்கீதத்தில் தனியாக கச்சேரி செய்யும் அளவிற்கு ரொம்பவும் தேர்ச்சி பெற்று இருந்தாள்.  இப்பேற்பட்ட சூழ்நிலையில் உமேஷ் ரொம்பவும் குழம்பி கிடந்தான். உடனடியாக ஏதாவது action எடுத்தால் தான் பெற்றோரின் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என ராஜூவை, மீண்டும் "ஏதாவது solution சொல்லுங்க சார்"னு பிடுங்கி எடுத்தான். உடனே, ராஜுவின் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. உமேஷிடம், இந்த பிரச்சினை அவ்வளவு சீக்கிரம் தீராது, so உடனே உன் ஆபீஸ்ல பெங்களூரு transfer  கேட்டு வாங்கிக்கொண்டு போகமுடியுமா  என்று கேட்கவே, உமேஷும் அதன் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டான். இருவருக்கும் கொஞ்சம் பாரம் குறைந்தமாதிரி இருந்தது. உமேஷ் கொஞ்சம் வருத்தத்துடன் , "சார், உங்களை பார்க்க முடியாதே சார்னு..?" கேட்கவே, ராஜு, "பெங்களூரு பக்கம் தானே, நீ எப்போவேணடுமானாலும் வரலாமே" என்று சொல்லி பிரச்சினைக்கு ஒரு temperory முற்று புள்ளி வைத்தான்.

உமேஷும் பெற்றோரிடம் ஏதோ காரணம் சொல்லி, தனக்கு பெங்களூரு transfer ஆகிவிட்டதாகவும் உடனே கிளம்ப வேண்டும் என்று சொல்லி, ரெண்டு நாட்களில் பெங்களூரு போய்  சேர்ந்தான். இரண்டு மாதம் பறந்து போனது. ஒரு நாள் போனில் ராஜூவை கூப்பிட்டு, தனக்கு ஒரு நல்ல சீனியர் நண்பர் கிடைத்து விட்டதாகவும், அவருடன் சந்தோசமாக இருப்பதாகவும் சொல்லி நிறுத்தாமல், அவங்க ரெண்டு பேரும் gay பார்ட்னர்ஸ் ஆகி விட்டதாகவும், we  are into  relationship,  living together nu ஒரு மிகவும் serious ஆன  விஷயத்தை அலட்சியமாக சொன்னான். அதோடு நில்லாமல் ரசிகாவிடமும் ஜாடை மாடையாக இதை பற்றி சொன்னதாகவும் ஏனென்றால் அவள் வெளி நாட்டில் இருப்பதனால், இந்த மாதிரி லைப் ஸ்டைல் ஏற்று கொள்வாள்  என்றும் சொன்னான். இவன் என்ன இப்பிடி விதியாசமான பாஸ்ட் ட்ராக்கில் போகிறானே என்று  ராஜு ஆச்சரியத்தில் மூழ்கினான். இதெல்லாம் நடக்கிற விஷயமா என்று ராஜு தனக்குள் கேட்டு கொண்டிருந்தான். இது வெளி நாட்டு கலாச்சாரம் ஆச்சே, எப்பிடி நமக்கு ஒத்து வரும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. இந்தியாவில் இந்த மாதிரி நிறைய GAYS இருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக ஒரே வயது குரூப் நண்பர்களுடன்தான்  relationship  வைத்துக்கொள்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறான் . ராஜுவிற்கு, உமேஷின் இந்த வாழ்க்கை முறையை அவனுடைய parents எப்பிடி ஏற்று கொள்வார்கள் என்றெல்லாம் யோசித்தான். இவர்களின் வாழ்க்கையை எப்பிடி அமைய போகுதுனு ரொம்ப கவலை  பட்டான் . ஏனென்றால் ராஜுவின் மனதிற்கு உமேஷ் எடுத்த முடிவு சரி என பட்டது. அவரவர் வாழ்க்கையை வேறு யாரும் முடிவு செய்ய கூடாதுயென நினைத்தான். இதில் பெற்றோரின் intervention கண்டிப்பாக இருக்க கூடாது என்பது ராஜுவின் உறுதியான எண்ணம். அவர்களுக்கு புரிய வைக்க  வேண்டியது மிகவும் அவசியம். இந்த சிக்கலான மற்றும் சென்சிடிவ் மேட்டர். பெற்றோர்கள் யதார்த்தமாகவும், பிள்ளைகளின் நன்மைக்காகவும் புரிந்து கொண்டு சப்போர்ட் செய்ய வேண்டும். பெற்றோர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த மாதிரி அணுகுமுறைகள் இல்லாததால் நிறைய பேர்கள் வாழ்கை ரொம்பவும் பாழானது . இட் ஐஸ் நாட் தட் easily said அண்ட் done. இந்த முடிவில்  எல்லோருடைய வாழ்கை முறையும் அதை சுற்றி உள்ள பிரச்சினைகளும் அடங்கும். இதை எல்லாவற்றையும் விட, ஒருவரின் மன  நிம்மதியும் வாழ்க்கையின அர்த்தமும் அடங்கி உள்ளது. இப்பிடி இருக்கையில், மீண்டும் உமேஷிடம் இருந்த்து ஒரு திரில்லர் படத்தில் வருவது  போல போன் வந்தது. நாளை நைட் தன் அக்கா ரசிகா சென்னை வருவதாகவும், அவளை வரவேற்க்க  தானும் சென்னை வருவதாகவும் சொன்னான்.  உமேஷ் சென்னை வர இன்னொரு முக்கிய காரணம் ரசிகா மூலம் தன் கல்யாண பிரச்சினைக்கு ஒரு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் குஷியாக இருந்தான். "ஆஹா, ரொம்ப சந்தோசம் வா, உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்றான் ராஜு.

மறுநாள் உமேஷ் நேராக ஏர்போர்ட்க்கே வந்துவிட்டான். அங்கே தான் அவனுடைய பெற்றோர்களையும் மீட் பண்ணும் படி ஆகிற்று. flight குறித்த நேரத்திற்கு வரவே உமேஷ் தன் அன்பு அக்காவை சந்திக்க ரொம்பவும் ஆவலாக  இருந்தான். ரசிகாவும் ரொம்பவும் தாமதம் இல்லாமல் trolly தள்ளி கொண்டுவரவே வேகமாக சென்று அக்காவை வரவேற்க சென்றான். வழக்கமாக அன்பு தம்பியை கண்டவுடன் அணைக்கும் அக்கா, இந்த தடவை ஹாய் மட்டுமே சொல்லி பெற்றோரின் பக்கம் நகர்ந்தாள் / உமேஷுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஓகே, மரியாதைக்காக அப்பா அம்மாவை முதலில் பார்க்கவேண்டும் என்ற ஆவலாக கூட இருக்கலாம்னு நினைத்து அக்கா பின்னாடி ஓடி போனான் . அக்கா அவனை  பார்த்து "டாக்ஸி , புக் பண்ணி  கொண்டு வரையா" என்று சொல்ல, உமேஷும் உடனே விரைந்தான் டாக்ஸி கவுண்டர் நோக்கி. ஒரு 10 நிமிடம் ஆகும் டாக்ஸி கிடைக்க என்று கவுண்ட்டரில்  சொல்லவே, சரி, அக்காவிடம் டாக்ஸி வரும் வரை பேசலாம் என்று அவர்களை நோக்கி வரும் நேரத்தில், உமேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த அசம்பாவித நிகழ்ச்சி நடந்தது. உமேஷின் அப்பா அவன்  கிட்ட வேகமாக வந்து, மிகவும் கோபமாக கண் இமைக்கும் நேரத்தில் உமேஷின் கன்னத்தில் பளார் என்று அறைந்து, ஆவேசத்துடன், "இனி என் முகத்தில விழிக்காதே, உன்னை பெற்றதுக்கு எங்களுக்கு இதுவும் வேணும் ,, இன்னமும் வேணும், நீ இவ்வளவு கேவலமா இருப்பேன்னு நினைக்கவே இல்ல  " என்று கன்னா  பின்னாவென்று ஏச ஆரம்பித்தார்." நீ எங்களுடன் வர வேண்டாம், இப்பிடியே போய்  விடு" என்று சொன்னார். உமேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவமானத்தால் ரொம்ப கூனி குறுகி போனான். அவன் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரசிகாவும் ஒன்றும் பேசவில்லை மாறாக அவளும் கோவமாக இருந்தாள். இதெல்லாம் ஏர்போர்ட்டில் டாக்ஸி வரும் நேரத்திற்குள் நடந்தன. உமேஷுக்கு உடனே புரிந்தது அப்பாவின் இந்த கோவத்திற்கு யார் காரணம் என்று. அக்காவின் வில்லி  குணம் தான் என புரிந்து கொண்டான். யாரு தனக்கு உறு துணையாக இருப்பாங்க என்று நினைத்தானோ, அவளே அவன் நெஞ்சில் வேலை பாய்ச்சினாள். நம்பிக்கை துரோகம் !!. பாவம், உமேஷ் மனது ஒடிந்து, அழுகையை அடக்கி கொண்டு வீட்டில் போய் விவரமாக பேசிக்கொள்ளலாம் என்று பேசாமலே அவர்களுடன் சென்றான்.

வீட்டில் luggage கொண்டு வைத்தவுடன், அவன் அப்பா மீண்டும் ஆவேசமாக, " நீ ஏன் பிள்ளை இல்லை, உனக்கு தலை மூழ்கியாச்சு, நீ எனக்கு கொள்ளி போடக்கூடாது, உன் ரூமை காலி பண்ணிக்கொண்டு போ" என்று சொல்லவே, உமேஷுக்கு இதற்கு மேல் அங்கு  இருக்க கொஞ்சம் கூட பிடிக்காமல் கண்கள் கலக்கத்துடன், தன் bag மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். உடனே உமேஷ் அருகில்  உள்ள bar கு சென்று சினிமா ஹீரோக்கள் மாதிரி குடிக்க ஆரம்பித்தான். அங்கிருந்து, ராஜூ விற்கு போன் பண்ணி உடனே வரும்படி அழைத்தான். ராஜுவும், ஆஹா பையன் ஒரு மாதிரி முடிவுக்கு வந்து விட்டான்,   அவன் பெற்றோர்களை  கன்வின்ஸ் பண்ணிட்டான்  போலன்னு ஆவலுடன் barக்கு விரைந்தான். அங்கு உமேஷை கண்டதும் தூக்கி வாரி போட்டது. எல்லா விஷயமும் ஒரு மாதிரி யூகிக்க முடிந்தது. சரி, மேட்டர் failure ஆகிட்டுது என புரிந்தது. உமேஷ் ராஜுவிடம் நடந்தவைகளை ஒன்று விடாமல் அழுது கொண்டே சொல்லி தீர்த்தான். ராஜூ வின் மனம் ரொம்பவும் கஷ்ட பட்டது. ஐயோ, பாவம்  உமேஷ், மிகவும் நொந்து போயிருந்தான். ராஜு அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டி, குடிப்பதை நிறுத்தி, முதலில் ஊருக்கு போகுமாறு வலியுறுத்தினான். "காலம் தான் பதில் சொல்லணும். உடம்பை பார்த்து கொள்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இது நடந்து ஒரு 3 மாதம் இருக்கும். ராஜுவின் போன் அலறியது. உமேஷ் தான் வேறு யாராக இருக்க முடியும் இந்த அர்த்த ராத்திரி வேளையில். என்ன சமாச்சாரம் என்று கேட்பதற்கு முன்னதாகவே, உமேஷ் முந்திக்கொண்டான்.
"சார், நாளைக்கு நான் Amesterdam போகிறேன், எல்லாம் லாஸ்ட் மினிட் decision " என்றான். ராஜுவும், " சந்தோஷமாக போய்ட்டு வா. நல்லா  வேலை எல்லாம் கற்றுக்கொள்" என்றான். அதற்கு , அவன், "சார், நீங்க வேற,  என்  பார்ட்னர்க்கு அமெஸ்டெர்டாம்க்கு போன இடத்தில, அசிஸிடெண்ட் ஆகிடுத்து, அதுக்கு ஹெல்ப்புக்கு போறேன், அவருதான் எல்லா செலவும் ஏத்துக்கிறாரு" ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டான். ராஜு வாய் அடைத்து போனான்." நிஜமாவா சொல்றே?, அவரு எப்பிடி உனக்காக...? இவ்வளவு ...? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கே, அதே சமயத்தில ரொம்ப பெருமையாகவும் இருக்கு, உங்க relationship நினைத்தால் "ன்னு சொன்னான். அதான் சார், gay  relationship னு ஒரு புது மீனிங் கொடுத்தான். ராஜு, "anyways , டேக் கேர் of yourself அண்ட் your partner , குட் luck , enjoy யுவர் stay "யென்று wish  பண்ணி, தூக்கம் இல்லாமல் ஆச்சர்யத்தில் புரண்டான்.

உமேஷ்  அடிக்கடி  அமெஸ்டெர்டாம் இல் நடந்த சுவையான அனுபவங்களையும், அங்கு எவ்வளவு பிரீ யாக மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்த வேலை மற்றும் லைப் ஸ்டைல் எல்லாம் ஒரு தடங்கலும் இல்லாமல் இருக்கிறதாக வாட்சப்பில் சொன்னான். அவனுக்கு அந்த ஊரு ரொம்ப பிடித்துப்போயிற்று. நாளை இந்தியா வருவதாக கூறினான். பாருங்கள் அவன் வந்து இறங்கிய நாள், இந்தியா வரலாற்றில்  மிகவும் முக்கியமான தீர்ப்பு உச்ச நீதி மன்றத்தில்  தீர்மானம் ஆகியது. அமாம் !!.., உமேஷ் போன்ற பல கோடி gay சார்பினர்களுக்காகவே தீர்மானிக்க பட்டது.   Articlle 377, gay relationship  அங்கீகரிக்கப்பட்ட செய்தி வெளியாகியது. இந்த சந்தோஷமான செய்தியை  ஏர்போர்ட்டிலேயே உமேஷ்  கேள்விப்பட்டான். உமேஷுக்கு தலை கால் புரியவில்லை. ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த ராஜூவை மனதார அணைத்து கொண்டான். ராஜுவும் அவனை வாழ்த்தினான். இனி உமேஷ்  ஒரு குற்றவாளி இல்லை. கால போக்கில் அவன் பெற்றோர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினான். ராஜுவும் அதை ஆமோதித்தான். உமேஷுடன் வந்த அவனுடைய பார்ட்னரை ராஜுவிற்கு அறிமுகம் செய்துவைத்து பின் அவரை அணைத்தபடியே இருவரும் கையை  கோர்த்து கொண்டு  தைரியமாக அவர்கள் வீட்டுக்கு இனிய முகத்துடன் ஏர்போர்ட் விட்டு வெளியேறினார்கள்.

ராஜுவின் மனம் நடந்தவற்றை அசை போட்டது. ஒரு சினிமா போல இருந்தது.  ஆனால் நடந்ததும் நடப்பதும் உண்மை. இது காலத்தின் கோலம். உமேஷ் மாதிரி கோடி கோடியான மக்கள் இந்த பிரச்சினைலருந்து விடு பட முடியாமல்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்கள் தேர்ந்து எடுத்த வாழ்கை இல்லை. பிறப்பின் அடையாளம்.
தனக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியாமலும், வெளியே சொல்ல முடியாமலும், உள்ளுக்குள் வேதனை பட்டு, மனம் நொந்து வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்.  கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு பார்த்தால் எல்லாமே கறுப்பாகத்தான் தெரியும். இவர்களை வேறுபடுத்த  தேவை இல்ல. சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். பெற்றோர்கள் அன்பும் ஆதரவு மற்றும் புரிதலும் தேவை. பல புகழ் வாய்ந்தவர்கள் gay என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.

இது ராஜுவின் சொந்த அபிப்பிராயம்.

                                              - எண்ணம், எழுத்து :- ரவி சங்கர்
*********************************************************************************




















L A N A K A J U M P (Continued)

L A N A K A     J U M P (Continued)

ராஜு தன்னுடைய  ஸ்ரீலங்கா ட்ரிப்  ரொம்பவும் ஜாலியாகவும் அலுப்பு தட்டாமலும் இருக்கவேண்டி  எல்லா எற்பாடுகளையும் ரொம்பவும் அக்கறையோடு செய்திருந்தான். எதுவும் மறக்காம இருக்கவும், கடைசி நிமிஷ சொதப்பல்கள் எதுவும் இருக்க கூடாது  என்பதற்காக ஒரு பாயிண்ட் கூட விடாம  எவ்வளவு அற்ப விஷயமானாலும் சரி எல்லாவற்றையும் தன் பாக்கெட் டைரியில் குறிச்சி வெச்சிருந்தான். அன்றைக்கு வீட்ல சமையல் எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டான். அதான் ஏகப்பட்ட food டெலிவரி app  இருக்கே.  ராஜு wife அவங்களுக்கு வேண்டிய ஐட்டம்ஸ் எல்லாம் கச்சிதமா எடுத்து பேக் பண்ணி வச்சிக்கிட்டாங்க. ராஜுவும் கடைசியா ஒரு 15 தடையாவது repack பண்ணி அவன் மனைவியை விட கொஞ்சம் பெரிய பேக்கிங்ல முடித்தான். ஒரு நாளைக்கு ரெண்டு டிரஸ் வீதம் ஒரு பத்து டிரஸ் எடுத்தது வைத்திருந்தான். ஏன்னா, விதம் விதமா போட்டோஸ் எடுக்கணுமாம். ராஜுவின் மனைவி  tour ப்ரோக்ராம் கைல வச்சிக்கிட்டு ஏங்க  இவ்வளவு தூக்கிட்டு வரீங்க , நீங்க இந்த tour ப்ரோக்ராம்  எவ்வளவு clear ah  போட்டுருக்காங்க. அது பிரகாரம் நம்மளுக்கு மொத்தமே 6 டிரஸ் தான் மாக்ஸிமம் தேவை, அப்பிடின்னு சொல்லவே  ராஜு  அரை மனசோடு மீண்டும் 16 தடவையாக ரீபாக்  பண்ண வேண்டியதாயிற்று. ராஜு  shoulder bag பல பாகெட்ஸ் கொண்டது. எப்போவோ துபாய்ல வாங்கியது. அதில எல்லா papers , டாக்குமெண்ட்ஸ், பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் மொபைல், ear பிளக் தவிர தனக்கு வேண்டிய ஐட்டம்ஸ் எல்லாம், ஒவொரு பாக்கெட்டிலேயும் மறக்காமல் வைத்து கொண்டான்.
"என்னங்க ..டாக்ஸி சொல்லிட்டீங்களா"ன்னு கேட்கவே, ராஜு டாக்ஸி அட்வான்ஸ் புக் பண்ணினான். tour மேனேஜர் சொன்ன மாதிரியே போன் பண்ணி ஏர்போர்ட்ல எங்க மீட் பண்ணணும்ன்னு விவரமா சொன்னாரு.
ராஜுவிற்கு சூப்பரா வெளிநாடு போற குஷி கிளம்பியது. டாக்ஸி சொன்ன நேரத்துக்கு வந்தது. ராஜு மொபைல்ல   டிராபிக் எங்கேய எல்லாம் இருக்குனு வந்தது. ஏர்போர்ட் சைடுல ரொம்ப டிராபிக் இருக்குனு அனௌன்ஸ்மென்ட் வரவே ராஜு  டாக்ஸி டிரைவர் கிட்ட , சார் நீங்க வேற வழியா போங்கன்னு சொல்ல , அதுக்கு அவரு "அதெல்லாம் ஒண்ணும்  இல்ல சார், இப்போ நா அங்கிருந்துதான் வரேன் சார் சவாரி விட்டுட்டு" அப்பிடின்னான். டாக்ஸி airport  நோக்கி சென்றது. இரவு மணி 11.30 இருக்கும். ஏர்போர்ட் நெருங்க நெருங்க செம்ம டிராபிக். இன்ச் இன்ச் தா வண்டிகள் நகர்ந்தது. பொதுவா ராஜு வீட்லேருந்து ஏர்போர்டைர்போர்ட்க்கு போவதற்கு அதிக பட்சம் 45 நிமிஷம்தான்  ஆகும். இன்னிக்குனு பார்த்து 1.30 ஆகியும் வண்டி இன்னும் ஏர்போர்ட் கண்ணிலேயே காணல. ராஜு டாக்ஸி டிரைவரிடம் , "நான் தான் அப்போவே சொன்னேனே, இந்த ரூட் வேண்டாம்னு, இப்போ பாருங்க எவ்வளவு ட்ராபிக்  இந்த ராத்திரில .." அப்பிடின்னு புலம்ப  ஆரம்பித்தான் மெள்ள. அதற்கு  டிரைவர் சார், நீங்க ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காதிங்க சார் னு சொல்லி, கண் இமைக்கும் நேரத்தில, டாக்ஸியை சும்மா சடார்னு லேபிட் சைடில் திருப்பி போக ஆரம்பித்தான். இந்த பக்கம்  போனா  ஈஸி  சார், டிராபிக் இருக்காதுன்னு சொல்லிக்கொண்டே இருக்கிற சந்து போந்து எல்லாம்வற்றிலும் வண்டியை திருப்பி, "பல்லாவரம் by நைட்" பூரா காண்பித்தான். ஒரு மாதிரி டாக்ஸி ஏர்போர்ட் பக்கம் மெயின் ரோடுக்கு  வந்தது. ராஜூக்கு பெரு மூச்சு அப்போ தான்  வந்தது. மீண்டும்  ராஜு முகத்தில் குஷி. டாக்ஸி விமான புறப்பாடு கேட் கிட்ட நின்றது. ராஜு luggage  எல்லாம் ஒழுங்கா இறக்கி டாக்ஸி டிரைவர்யை அனுப்புவிட்டு, மனைவி கிட்ட baggage பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு, தான் ட்ராலி எடுக்க சென்றான். நல்ல வேளையாக ஒரு ட்ராலி பக்கத்திலேயே இருக்க அதில் luggageயை தூக்கி வைத்தான். ட்ராலி தள்ளலாம்னு ட்ரை பண்ணும் பொது, ட்ராலி நாலா பக்கமும் சென்றது ..இது என்னடா கஷ்ட காலம் னு பார்த்தால் , ட்ராலியில் வீல் நான்கும் ஒவொரு பக்கமும் சென்றது..இதெல்லாம் வேலைக்கு  ஆகாதுன்னு சொல்லி அவர்களுடைய ட்ராலிbag யை அவர்களே இழுத்து கொண்டு சென்று நுழை வாயில் செக்யூரிட்டி கிட்ட வந்தார்கள். அவனிடம் பாஸ்போர்ட், டிக்கெட் காண்பித்தால்தான் உள்ளே போக முடியும். ராஜு உடனே முன் ஜாக்கிரதையாக தன்னுடைய பல பாக்கெட்டுகள் கொண்ட ஜிப் பைக்கில் கை விட்டு வேண்டிய டாக்குமெண்ட்ஸ் எடுக்கலாம்னு ஒவொரு ஜிப்பாக திறந்து  பார்க்கும் நேரத்திற்குள் செக்யூரிட்டி கிட்ட ராஜு வந்தான்.  அவன் ஹிந்தியில் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கேட்க, ராஜு தனக்கு தெரிந்த 'ஏக் gau மெய்ன் ஏக் கிஸ்ஸான்  ரகு தாத்தா" ஹிந்தில ஏதோ சொல்ல போக அந்த செக்யூரிட்டி கடுப்பாகி ராஜூவை ஓரம் கட்டினான். ராஜு கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டான். இப்போது HOD  தலையிட வேண்டிய கட்டம். உடனே ராஜு, "நான் தான் வச்சிருக்கேன், எனக்கு தெரியும் எந்த பொக்கெட்"ன்னு சொல்லி மீண்டும் ஒவொரு ஜிப்பும் ஓப்பன் ஆகியது.  அவன் படுகிற அவஸ்த்தையை பார்த்த  மனைவி  சும்மா அனாவசியமா அந்த baga  பிடுங்கி  முதல் பாக்கெட் ஓபன் பண்ணி டாக்குமெண்ட்ஸ் கைல எடுத்து ராஜூவை ஒரு கடுப்பு பார்வை பார்த்து, செக்யூரிட்டியிடம்  , பாமா விஜயம் சௌகார் ஜானகி விஷாரத் ஹிந்தி பேசுற  மாதிரி அலட்சியமாக  ஹிந்தில ஏதோ பேசபோக  உடனே அந்த, செக்யூரிட்டி ராஜூவை பார்த்து கேவலமா சிரித்துக்கொண்டே ஒரு salute அடித்து அவர்களை உள்ளே விட்டான். ராஜுவுக்கு தெரியும் தன் ஹிந்தி  திருத்தணி தாண்டாதுன்னு ஆனாக்க இப்போ தான் புரிஞ்சிது சென்னை ஏர்போர்ட் கூட தாண்டதுன்னு ...!! ஏனென்றால் ராஜு இந்தி prathmik எக்ஸாம்ல  fail .!!எப்பிடியோ உள்ளே வந்தாச்சு, வண்ண ஒளி மயம். ராஜு அந்த tour மேனேஜர் சொன்ன கேட் 3 கிட்டவந்து ஒரு 10 நிமிஷம் வெயிட் பண்ணும்போது ராஜுவின் மொபைல் அலறியது.  "சார், எங்கே இருக்கீங்க, நாங்க எல்லாம் கேட் 3 கிட்ட உங்களுக்காக வெயிட் பண்றோம்னு"  சொல்ல , ராஜு தானும் கேட் 3 கிட்ட தான் இருப்பதாகவும், மேனேஜர்கிட்ட, "நீங்க   எங்கே இருக்கீங்க"ன்னு கேட்டான். "கேட் 3 பக்கத்தில ஒரு காபி ஷாப் இருக்கு பாருங்க, அங்க தான் நிக்கிறோம்"னு சொல்லவே ராஜு கேட் 3 பக்கம் நோட்டம் விட, ஒரு காபி ஷாப்பையும் காணவில்லை. ராஜு மீண்டும் மேனேஜரை போனில், " சார், எங்கே இருக்கீங்க,? இங்க ஒரு காபி ஷாப் கூட இல்லையே" ன்னு கேட்க அவரு அதே பதிலா சொல்ல ராஜுக்கு கொஞ்சம் confuse ஆகியது. இந்த போன் சமாச்சாரத்தை கேட்ட மனைவி, நீங்க உள்ளே கேட் 3 கிட்ட இருக்கேனு சொல்லுங்க அப்படினு சொல்ல ராஜுவிற்கு, ஆமா இல்ல ,,மறுபடியும் மனஜேர்க்கு, " சார்,, நாங்க கேட் 3 உள்ள இருக்கோம்"னு சொல்ல மேனேஜர்  கொஞ்சம் சூடாக, "உங்கள வெளி பக்கம் கேட் 3 பக்கத்தில இருக்கிற  காபி ஷாப் கிட்ட நிக்கணும்னு  சொன்னேனே சார்,,பரவ இல்ல நீங்க மத்த பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு departure கேட் கிட்ட இருங்க"னு சொல்லி " ஓகே சார், சி யூ தேர்" ன்னுசொல்லி போன் அடங்கியது. அடுத்த கட்டம், செக் இன் பண்ணனும். அங்கேயும் கொஞ்சம் சிக்கல் . வேற ஒண் ணும்  இல்ல. சீட் நம்பர் அடுத்து அடுத்து  கிடைக்கல. ஏன்னா குரூப் டிக்கெட்டாம், நீங்களே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க கவுண்டர் ல இருக்கிற ஸ்ரீலங்கன் கண்மணிகள். ராஜுவும்,  "ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் நம்ப ஆளுங்க தான் ..மாத்தி உக்காந்துக்கலாம்"ன்னு சொல்லி ஒரு சமாளிப்பு.  இரவு  மணி 2.30, ராஜுவிற்கு பசி அடிவயத்தை கிள்ளியது. சரி, ஏதாவது சாப்பிடலாம்னா, இந்த சமயத்தில ஏதாவது தின்னு வயறு அப்புறம் கட முட ஆச்சுன்னா ..ஐயோ சாமி வேண்டப்பா அப்பிடின்னு சமாதான படுத்திக்கொண்டான். 
ராஜு நிறைய வெளிநாடு பயணம் சென்றிருந்ததால் ஒண்ணும் டென்ஷன் இல்லாம  இருந்தான். விடிகாலை 3.35கு flight ஆனதால் தூக்கம் கெட்டது . மேனேஜர்  குரூப்புடன் வரும் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். சிறுவர் முதல் ராஜூவை விட சீனியர் வரை பல தரப்பட்ட நண்பர்கள் ஆனார்கள். flight போர்டிங் அனௌன்ஸ்மென்ட் வரவே, எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு வரிசையில் முன்னேறினார்கள். விமானம் உள்ளே கையை கூப்பியபடியே, Ayobhavan என சொல்லி விமான பணிப்பெண்கள் அவர்கள் ஸ்ரீலங்கன் நாட்டு தேசிய உடையுடன் வரவேற்றனர். ராஜுவிற்கு முன்னாடி போய்க்கொண்டிருந்த ஒரு சக குரூப் ஆளு, என்ன இவங்க நாம கட்டுற கண்டாங்கி சேலை மாதிரி இருக்குதுனு மெல்ல முணு முணுத்தாங்க. குரூப் மெம்பெர்ஸ் எல்லோருக்கும் சீட் நம்பர்ஸ் தாறு மாறாக வரவே, விமானத்துக்குள் ஒரே அமளி தான். பணி பெண்கள் பார்த்தாங்க. இவங்க சண்டை ஓயாது போல. விமானம் புறப்பட போவுது , கொஞ்ச நேரம் பொறுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லி எல்லோரையும் அமைதி படுத்தினாங்க. அதிர்ஷ்டவசமாக ராஜு ஒரு சக பாசெஞ்சுருடன் லாவகமாக பேசி தனக்கும் மனைவிக்கும் பக்கத்து சீட் கிடைக்க சந்தோசமாக உட்கார்ந்து கொண்டான். ராஜுவிற்கு தூக்கம் ஒரு பக்கம், பசி ஒரு பக்கம். விமானம் வானத்தில் மேலே பறந்தது. மீண்டும் ஒரே அமளி. சீட் மாற்றி உட்கார தான். இப்பொழுது  பணி பெண்கள், breakfast கொடுக்கப்போகிறோம் சற்று சீட்டில் அமைதியாக உட்காரவும் சொல்லவே மீண்டும் silent  ஆனார்கள். இந்த சிற்றுண்டி சமாச்சாரம் கொஞ்சமும் எதிர்பார்க்காதது என்றால் நெடுந்தூரம் போகும் பயணம் இல்லவே. ராஜுக்கு கொஞ்சம் உயிர் வந்தது. ஜில்லுன்னு ஒரு காற்று மாதிரி, சில்லுன்னு  ஒரு ஸாண்டவிச் வந்தது. எல்லோருக்கும் பசி. ஒரு பத்து நிமிஷம் பேச்சு மூச்சே இல்ல. எல்லார் கவனமும் ஸாண்டவிச் தின்பதிலேயே தான். ஒரு மாதிரி அந்த கடன் முடிந்தவுடன், மீண்டும் இடத்திற்கு போட்டி ஆரம்பித்தார்கள். ஒரு 5 நிமிஷம் இருக்கும். மீண்டும் அறிவிப்பு. விமானம் லாண்டிங் ஆக  போகுது, தங்கள் இருக்கையில் அமருமாறு..!! மொத்த பயண நேரமே 55 நிமிஷம் தான். அதுக்கு தான் இவ்வளவு அமர்க்களம். எல்லோர் கண்ணும் ரத்த சிவப்பாக இருந்தது சரியாய் தூக்கம் இல்லாமல். விமானம் ஸ்ரீலங்கா பண்டாரநாயகா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இறங்கி  நின்றது. மறுபடியும் இறங்க வேண்டிய அமளி . கடைசிவரை யாரும் அவங்க சீட்ல உட்காரலை.

ஹையா!! , ராஜிவிற்கு ஒரே குஷி..மனைவி கையை அன்புடன் பிடித்துக்கொண்டு இமிகிரேஷன் கவுண்டர்க்கு சென்றான். மேனேஜர் எல்லோருக்கும் அன்புடன் instructions கொடுத்துக்கொண்டே வந்தார். என்ன ஆச்சர்யம். இந்த இமிகிரேஷன் ஒரு தொல்லையும் இல்லாமல் 10 நிமிடங்களில் முடிந்து baggae எடுக்க முனைந்தான். அந்த ஹாலில் நெறய டூட்டி பிரீ கடைகள் ஆசை காட்டின . அங்கேயம் டூட்டி பிரீ டாஸ்மாக் கடைக்கு மாத்திரம் செம்ம கும்பல். ஒன்று வாங்கினால் இனொன்று free  என்று போட்டிருந்தது. அதான்  ஒரே மக்கள் கூட்டம் ஈ மாதிரி. மற்ற கடைகள் எல்லாம் தூங்கி வழிந்தது.மேனேஜர் நம்ம ஆளுங்கள பார்த்து சிரித்துக்கொண்டே , "இப்போ எதையும் வாங்காதீங்க , திரும்பி return  ஆகும் போது நிதானமா வாங்கிக்கலாம்"னு சொல்லவே, சில மக்கள் அறுந்த முகத்துடன் வெளியேறினார்கள். 
இளம் காலை . சில்லென்ற மிதமான ஸ்ரீலங்கா காற்று. எங்களை வரவேற்க, ராஜ பக்க்ஷே வருவாரோன்னு எல்லோரும் தமாஷாக பேசிக்கொண்டிருக்கும் போது , சிரித்த முகத்துடன், முத்தையா முரளிதரன் ஜாடையில் இனிய முகத்துடன், "வணக்கம்...ஆயோபாவன்" ன்னு எங்களுடன்  ஸ்ரீலங்காவை சுற்றி காண்பிக்க வேண்டி வந்தவர் , பெயர் நளின் குணசேகரா .அழகான ஸ்ரீலங்கா பெயர். கொச்சை தமிழும் மிச்சம் ஆங்கிலமும் பேச முயற்சித்தார். எல்லோரையும் சொகுசு பஸ்சில் உட்கார வைக்க வண்டி புறப்பட்டது. ஒரு 5 நிமிஷம் இருக்கும், பஸ் மெயின் ரோடு கூட வந்து இருக்காது. நளின் கையில் மைக் வைத்துக்கொண்டு வெல்கம் டு ஸ்ரீலங்கா என்று சொல்ல திரும்பினார் . பஸ்சில் பேச்சு மூச்சே இல்ல. எல்லோரும், ஒருவர் மேல சாய்ந்துகொண்டும், பின்னாடி சாய்ந்துகொண்டும் ஒரே " கொர் ..கொர் ..." தூங்கி விட்டார்கள். ராஜு வும் அப்படியே மனைவியின் மீது சயனிச்சான். 

ஸ்ரீலங்கா ஒரு ரம்மியமான  கேரளா.  வளைந்து வளைந்து சென்றது அகலமில்லாத ரோடு . முதல் ஹால்ட் breakfast. ஒரு இந்தியன் ஹோடேலின்முன் பஸ் நின்றது. பஸ்ஸில் வந்த பாதி பேர் அவசரம் அவசரமாக வாஷ் ரூம்மை நோக்கி ஓடினார்கள். மற்றவர்கள் பார்க்க அருமையாக இருந்த கல் இட்லி,  தடியான தோசை மற்றும் சின்ன பாறாங்கல் போல் தோற்றமளித்த வடை போன்ற ஒரு வஸ்து, சாம்பார் மாதிரி ஒரு சைடு டிஷ், சிலோன் பரோட்டா  வைத்திருந்தாலும், மக்கள் பசியினால் ஒரு கமெண்டும் அடிக்காமல் வயிறார சாப்பிட்டார்கள். நளின் எல்லோரிடமும் அன்றைய புரோக்ராம் சொல்லிக்கொண்டே போனாரு. 
 
அன்றைய ப்ரோக்ராம் முடிந்த பிறகுதான் ஹோட்டல் செக் இன் என்று tour மேனேஜர் கூறவே, எல்லோரும் ரொம்பவும் களைத்து போயிவிட்டார்கள். மேனேஜர், இன்றைக்கு மாத்திரம் தான் இந்த மாதிரி, மற்ற நாட்களில் இந்த மாதிரி இருக்காது, ஏனென்றால், நம்முடைய ஹோட்டல்  கடைசியில் இருப்பதாலும், நம்ம பார்க்க வேண்டிய இடங்கள் முன்னாடி இருப்பதாலும் இந்த ஏற்பாடு  என்று சமாதானம் 
சொன்னாரு. ஸ்ரீலங்காவில் நாம் பார்க்கவேண்டிய ஒவொரு இடமும் வெகு தூரத்தில் இருப்பதால் பிரயாண டைம் கொஞ்சம் ஜாஸ்தி எடுக்கும். போகும் வழியில், எழில் கொஞ்சும் மலை பிரதேசம். அங்கு உள்ள டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி பார்த்துவிட்டு, மதியம் சாப்பாட்டுக்கு பஸ்  ஒரு ஹோட்டல் முன் நின்றது. வெகு விமரிசையான மதிய உணவு. சூப்பர் ஸெல்ப் சர்விங் மெனு . கூட  வந்த ஒரு தம்பதியினர்தான் கொண்டுவந்திருந்த கை பையில் யாருக்கும் தெரியாமல்  பிரட், ஜாம், bun , பழங்கள் போன்றவற்றை அமுக்கி வைத்துக்கொண்டார்கள். இதை ராஜு கவனிக்கவே, ரொம்பவும் சாமர்த்தியமாக நீங்க கூட எடுத்துக்கோங்க சார், வழியில் சாப்பிடலாம்னு தன் அல்ப்ப தனத்தை வெளிப்படுத்தினாங்க. 
அவங்களை பார்த்த வேறு பேமிலி, தாங்களும் எடுத்து வைத்து கொண்டார்கள் பகிரங்கமாக. ஹோட்டல் ஆட்கள் அவங்களை கண்டும் கண்டுக்காம இருந்தார்கள். 
மற்ற நன்கு நாட்களில் ரம்போட நீர் விழுச்சி, யானைகள் சரணாலயம்  , ஆமைகள் வளர்ப்பு, புத்தர் கோவில், கதிர்காமம் முருகன் கோவில், ஆஞ்சநேயர் கோவில்,  ஹெர்பல் கார்டன், சீதா அசோகா வன வாசம் ,கொழும்பு ஷாப்பிங் இப்பிடி பல முக்கியமான இடங்களை மிகவும் சிரத்தையுடன் ஸ்ரீலங்கா நண்பர் பொறுமையாக காண்பித்து அந்தந்த இடங்களின் பெருமைகளை பற்றியும் விலா  வாரியாக விளக்கினார். இதுல கதிர்காமம் முருகன் கோவிலை பற்றி இங்கே சுவாரசியமான தகவல் சொல்லியே ஆகணும். அந்த கோவிலுக்கு சென்றிந்தபோது, ஸ்வாமியின் சன்னதிக்கு திரை போட்டிருந்தது. அர்ச்சனை செய்யும்  குருக்கள் உற்சவ மூர்த்தியை விட சிறிய சைஸில் இருந்தார்!! அவர் கூறிய வரலாறு என்னவென்றால், இந்த முருகன் சந்நிதி விசாக மாதம்  செவ்வாய் கிழமை மட்டும்  தான் திரை விலக்கி தீபாராதனை நடைபெறும் என்று  சொன்னார்.  அதேமாதிரி புத்தர் கோவிலில் இருக்கும்  மகா புத்தரின் பல் பக்தர்களின் பார்வைக்கு மாதம் ஒரு முறை தான் தெரியும் என சொன்னார்கள்.
இப்பிடியாக, மேலும் பல சுவாரசியமான விஷயங்களை ராஜு அண்ட் கம்பெனி  பார்த்து ரசித்தார்கள். . கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடு  என ஸ்ரீலங்காவை  எல்லோரும் ஒரு மனதாக  புகழ்ந்தார்கள். சும்மா சொல்ல  கூடாது. ஸ்ரீலங்கா மிகவும் சுத்தமாகவும் , சுகாதாரமானதாவும், toursit friendly யாகவும் இருக்கிறது. வாகனங்கள் காதை பிளக்கும் அளவுக்கு ஒலி எழுப்பவில்லை. ராஜுவிற்கும் அவன் மனைவிக்கும் இவ்வளவு சின்ன நாடு, எப்பிடி வைத்திருக்காங்க ...ஹும் ...நம்ம சென்னையை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பிடின்னு மனசு வேதனை பட்டாங்க . விமானம் சிங்கார சென்னை வந்து அடைந்த பொழுது முதல் பிரச்சினை lauggage சமயத்திற்கு வராது, இமிகிரேஷன்ல ஒரேடியா வரிசை, டாக்ஸி பிடிக்கும் படலம் , அப்புறம் டிராபிக் ஜாம் , noise  pollution  இப்பிடிபட்ட பிரச்சினைகள்  ராஜுவின் இனிமையான ஸ்ரீலங்கா பயண அனுபவங்களில் அடிபட்டு போனது. !!!.
                                                     *********************
                                               - எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்   


















******************************************************************************