Wednesday, May 30, 2018

ஆகாய பந்தலிலே .....

                                                                   ஆகாய பந்தலிலே .....


 எல்லா பிள்ளைகளுக்கும் தான் முதல் சம்பாத்தியதில  தன் அம்மாவுக்கு ஏதாவது ஸ்பெஷல்ah செய்யணும்னு ஆசை. அதுக்கு நம்ப ராஜுவும் ஒரு விதி விலக்கு  இல்ல. ராஜு முதல் தடவையா தன் அம்மாவை ஏரோபிளான்ல
கூட்டி செல்ல  வேண்டும்ன்னு ஆசைப்பட்டான். இதெல்லாம் அவன்  கல்யாணத்துக்கு  முன்னாடி நடந்த சமாச்சாரங்கள். நல்லா நினைவிருக்கட்டும்  !!  அந்த சமாச்சாரத்தை ஒரு surprise ஆக வெச்சிருந்தான். பெங்களூர்ல இருக்கிற தன் சிஸ்டர் வீட்டுக்கு அம்மாவை அழைத்தகொண்டு போறதாக பிளான். அக்காவிற்கு மாத்திரம் ரகசியமாக போன்ல சொல்லிட்டான் இந்த வாரம் weekend வருவதாக. அம்மா நல்ல மூட்ல இருக்கும் போது பார்த்து இந்த வாரம் நம்ப ரெண்டு பெரும் பெங்களூரு Friday  போயிடு Tuesday  வரலாமா, என்னக்கு லாங் வீக் end அப்படடினு ஒரு பக்கம் அம்மாவை ஒரே கண்ணால பார்த்து கொண்டே கேட்டான். ஏதோ கை  வேலைய இருந்த அம்மாவும் எனக்கும் உமாவையும் குழந்தையும் பார்க்கணும் போல தா இருக்கு. தட்கல்ல கூட டிக்கெட் கிடைக்காதே, ஹாலிடே சீசன் அச்சேன்னு கொஞ்சம் வருத்தத்தோடு சொல்ல, அதுக்கு நீ ஒன்னும் கவலை படாதே  அம்மா, நான் பார்த்துகிறேன்னு சொல்லிட்டான். ..அம்மா முகம் 1000 வாட் சோடியம் vapour பல்பு தான்.

இனி அம்மாவோட action  பிளான் பாக்கணுமே. எத்தனை மணிக்கு டா  வண்டி, brindavan  இல்ல லால் பாக் ? பாவம்,  அம்மாவின் மனம் அதுக்கு மேல costly வண்டிகளுக்கு இடம் கொடுக்கல. அப்போ, கொஞ்சம் அரிசி, உளுந்து  ஊற இப்போவே போடறேன், ட்ரைன்ல சாப்பிட்டு போகலாம், ட்ரைன்ல விக்கற  பண்டம் எதுவும்வாங்க வேண்டாம், ரொம்ப மோசமா இருக்கும். மாப்பிள்ளைக்கும் குழந்தைக்கும்  மாத்திரம் கொஞ்சம் திரட்டிப்பால் பண்ணறேன்னு  சொல்லி பிரிகேட்ஜ் திறந்து பால் இருக்கானு செக்கப்பண்ண போய்ட்டாங்க. அம்மாக்கு கையும் ஓடல காலும் ஓடல. நாளைக்கு மோர்னிங் வண்டினு சொல்றே,,ஒரு  காரியம் அகல , டிரஸ் எடுத்து வச்சுக்கணும், ஸ்வீட் பண்ணனும், அப்புறம் சாம்பார் போடி கேட்டா  உமா, அது வேற ரெடி பண்ணனும்னு பெரிய லிஸ்ட் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. உடனே ராஜு நம்ப இப்போ short விசிட்க்கு தா போறோம்மா  , ஸோ, டேக் இட் ஈஸி மா  என்றான். உனக்கு என்ன. உன் மொபைல், ஒரு ஜீன்ஸ் பிளஸ் ரெண்டு டீ ஷர்ட் இருந்த போறும் . நான் எல்லாம் ரெடி பண்ணனும். அம்மா தேனியாக பறந்தாள். தான் ஒரு சின்ன வீக் end backpack மட்டும் ரெடி பண்ணி அம்மா சொன்ன தன்   items மாத்திரம் எடுத்துவச்சுக்கிட்டான் , அம்மா கிட்ட ஆதார் கார்டு எடுத்துக்கோங்க, சீனியர் சிடிஸின் ஆச்சே அப்படினு  கிட்ட உரக்க சொல்லி தன மட்டும் மனதில் சிறித்து கொண்டான். நாளை காலை 7.30மணிக்கு பிலைட் . அதுனால கால் டாக்ஸி அட்வான்ஸ் புக் பண்ணிவிட்டு காலை 5.00 மணிக்கு அலாரம் மொபைல்ல செட் பண்ணிட்டு வாட்ஸாப்பல  மூழ்கிட்டான். தான்  இப்போ லேட்டஸ்ட் பேஷன் எந்த பசங்களும்  ஷேவ் பண்றதே இல்லையே. ராஜுவும் அந்த கட்சி தான். ஒரு  வழிய நைட் டின்னர் சிம்பிளாக முடிச்சுட்டு படுக்க போய்ட்டான். ஏன்னா விடியக்காலை 5.30க்கு எழுந்திருக்கணுமாம்!!நைட் எவ்வளவு நேரம் அனாலும் வாட்ஸாப்ப், facebook youtube அப்பிடின்னு நேரம் போன கணக்கு கிடையாது.

இங்கே ராஜுவின் பேமிலி பத்தி கொஞ்சம் quickah பார்த்துடுவோம். ராஜுவின் தந்தை அவன் சிறு வயதிலேயே காலமானதால் அம்மாதா பூரா பொறுப்போடு அவனை வளர்த்தாள் . நல்ல காலம் அம்மா அந்த காலத்து கான்வென்ட். sslc  வரை. அதனால ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சு ராஜூவையம் உமாவையும்  ரொம்பவும் இண்டிபெண்டெண்டாக வளர்த்தாள். ராஜுவும் ரொம்ப ஸ்மார்ட். உமா , ராஜு அம்மா மூன்று  பேருக்கும் நல்ல understanding இருந்தது.

Friday  வந்தாச்சுனு அலாரம் அடிக்க அப்போதான் தூங்கின மாதிரி சலிச்சுக்கிட்டே எந்திரிச்சான். கிச்சன் பக்கம் எட்டி பார்த்தா அங்கே அம்மா சூப்பரா குளிச்சிட்டு ஸ்வாமிக்கு விளக்கு ஏத்தி வச்சு காபி உடன் வந்தாங்க . ராஜு !! ரா....அட நீ இன் ரெடி ஆகவே இல்லையா. போய்  குளிச்சிட்டு வா, காபி சாப்பிட்டு ஒரு ரெண்டு இட்லி சாப்பிட்டா கொஞ்சம் பசி அடங்கும். எப்பவுமே ட்ரெய்ன்ல போகும் போது கொஞ்சம் அதிகமாகவே பசிக்கும் அத சொன்னேன். அம்மா !! ப்ளீஸ் ரொம்ப ஓவர் சீன் போடாதே. நான் என்ன சின்ன பையனா. எல்லாம் பெங்களூரு போய் குளிச்சிக்கலாம் னு சொன்னான். ஏன்னா அவனுக்கு தான் அந்த flightல  போற ரகசியம் தெரியும் . ஆமா, இல்லாட்டா மாத்திரம் நீ என்னைக்கு காலையில குளிச்சிருக்கே. தீபாவளிக்கு கூட குளிச்சது இல்ல. அம்மாவின் பேச்சை கேட்காமல் ராஜு jeansக்குள்  புகுந்துகொண்டான்.

பாக்கெட்ல மொபைல் 5.15க்கு  சரியாய் அடித்தது. கால் டாக்ஸி தான். சார், ராஜூங்களா, டாக்ஸி சார், அட்ரஸ் எங்கே, எங்கே போகணும் அப்பிடின்னு சரமாரியா  கேள்வி. உடனே ராஜு தன்னால் முடிந்த வரையில் அம்மாவுக்கு surpriseஆக இருக்க வேண்டி வாசலில் போய் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு வந்தான். அம்மா தன் ட்ராலி bag உடன் ரெடி.  அதை விட கொஞ்சம் கம்மியான சைஸில் shoulder bag  !! அதுலதான் எல்லா சாப்பிடற வஸ்துக்கள் எல்லாம் இருக்கு.அய்யே, இந்த சென்ட்ரல் ஸ்டேஷன்ல பிளாட்பார்ம் கண்டு பிடிச்சு கம்பார்ட்மெண்ட் தேடி சீட்ல உக்காரத்துக்குள்ள தாவு விட்டு போயிடும்னு அம்மா சலித்து கொண்டாள். ராஜு மனசில சொல்ல முடியாத ஒரு வித அல்ப சந்தோசம் . கால் டாக்ஸி வந்தது. அம்மா வீட்டை பூட்டி, ராஜூவையும் ஒரு தடவை செக் பண்ண சொல்லி டாக்ஸியில் அமர்ந்தார்கள். டாக்ஸி புறப்பட்டது. எங்கேய போகவேண்டுமோ அந்த எடத்துக்கு GPS செட் பண்ணி பறந்தது. அம்மாவுக்கு சென்னை நல்லாவே தெரியும். இருந்தாலும் தூக்கக்கலக்கம் போல. ஏர்போர்ட் என்ட்ரி கேட் வரை நல்லா தூங்கிட்டாங்க. ராஜுவுக்கு  மீண்டும் ஒரு அல்ப....டாக்ஸி departure கேட் ல பிரேக் போட்டு நிறுத்தினான். அம்மாக்கு தூக்கி வாரி போட, தூக்கத்திலிருந்து முழிச்சி பார்த்து , அட சென்ட்ரல் ஸ்டேஷன் என்னமா ஜொலிக்கிறது அப்படினு சொல்லி கீழே இறங்கினாள். ஒரு நிமிஷம் தான். சுதாரிச்சிகிட்டு உடனே, என்னடா ஏர்போர்ட் வந்திருக்கோம் னு ஆச்சரியத்தோட கேட்டாங்க. ராஜுவுக்கு இதுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியல. தன்னோட surprise பிளான் பத்தி சொன்னான். அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம், பெருமை எல்லாம் சேர்ந்து ராஜூவை அங்கேயே கட்டி கொண்டாள். ஏன்டா, டிக்கெட் சார்ஜ் ரொம்ப ஆகுமேடா ???!!  ராஜு உடனே அப்பிடியெல்லாம் ஒண்ணும்  இல்லேம்மா, ஹாலிடே சீப் fare போட்டாங்க , அதன் வாங்கினேன், நீ சும்மா ஜாலி வா...ச்ச , தெரிஞ்சிருந்தா பிலைட்க்கு ஏத்த மாதிரி சாரீ கட்டி இருப்பேன் அப்பிடின்னு அம்மாவுக்கு ஒரு சிறு வருத்தம்.

Now , ஏர்போர்ட் சீன்,அந்த குளு  குளு பெரிய lounge , ஏர் ஹோஸ்டஸ் , செக்கின் கவுண்டர் லேடீஸ் இவங்களை அம்மா ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும்  பார்த்து மகிழ்ந்தாள். எனக்கு கூட  ஸ்கூல் முடிச்சிட்டு ஏர்லைன்ஸ் வேலை செய்யணும்னு ஆசை. எனக்கு flight ல  உலகம் பூரா pass ல சுத்திப்பார்க்கணும்ணு  ஆசை. ஹும் , எங்கே..என்ன puc  கூட படிக்கச் வகைல  என அங்காயித்தாள். அதனால் என்னம்மா , என்னக்கு onsite ஜாப்  வாரத்துக்கு நெறய வாய்ப்புகள் இருக்கு..நீ  ஒன்னும் வருத்தப்படாதேன்னு சொல்ல அம்மாவிற்கு மனசு ஏர்போர்ட் குளு  குளு  விட ரொமப குளிரிந்தது. அம்மா கைல போர்டிங் பாஸ் கொடுத்து பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லி அம்மாவை லேடீஸ் செக்யூரிட்டி செக் சைடு அனுப்பிவிட்டு தான் ஜெனட்ஸ் சைடுக்கு  வந்தான். அம்மா போர்டிங் கார்டலில் உள்ள எல்லா  சமாச்சாரத்தையும் நல்ல படித்து கொண்டாள் இன்டெரெஸ்டிங்கா.
இப்போ flight  புறப்பாடு அனௌன்ஸ்மென்ட். அம்மாவுக்கு ஒரு இனம் புரியாத சந்தோசம். தன வயதஒத்த சக பயணிகளோட தன்னையும் ஒப்பிட்டுக்கொண்டாள். மனசுக்குள் ஒரு திருப்தி தான் சரியாக தான் மாட்சிங்காக  இருக்கிறோம் என்கிற  சந்தோசம்.

அம்மாவின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணமமும் ராஜுவின் நீண்ட நாள் அசையும் நிறைவேறும் தருணம்  வந்தது. பிலைட்க்குள் முதல் பிரவேசம். விமான பணி பெண்கள் எல்லோரையும் ஒரு வித  செயற்கை சிரிப்புடன் வணக்கம் தெரிவிக்க , அம்மா அவர்களுக்கு குட் மார்னிங் சிரித்துக்கொண்டே சொன்னாள். மற்றவர்கள் அவர்கள்  பக்கம் திரும்பி கூட  பார்க்காமல் தங்களுடைய சீட் தேட முட்டி தள்ளி கொண்டு இருந்தனர், அம்மாவுக்கு பயங்கர கடுப்பு, இது என்ன கொஞ்சம் கூட manners இல்லாம. third  கிளாஸ் ரயில்வே கம்பார்ட்மெண்ட் மாதிரி இருக்கே அப்பிடின்னு.  அம்மாவை விண்டோ சீட்ல உக்கார்த்திவைச்சாச்சு. அம்மாவுக்கு ரொம்ப குஷி. திரும்பி  திரும்பி அங்கேயும் இங்கேயும் சக passengers யும் ஒரு நோட்டம் விட்டாள் . அடுத்த  கட்டம் ஒரு சின்ன டெஸ்ட். அம்மா எப்பிடி சீட்  பெல்ட் போடறானு பார்ப்போம் னு, என்ன ஆச்சரியம் நான் பெல்ட்   போடுவதை  ஓர கண்ணால் பார்த்து தானும் போட் டு கொண்டு  இதெல்லாம் என்ன பெரிய மேட்டரா  மாதிரி விண்டோ வழியாக ஏர்போர்ட் ரசிக்க ஆரம்பிதாள். ஏன்னா ராஜுவோட  முதல் பிலைட் அனுபவத்தில் தான் சீட் பெல்ட் போட தெரியாமல் கொஞ்சம் தடுமாற பக்கத்து passenger  சொல்லி கொடுத்த நியாபகம் வந்தது. விமானம்  கிளம்பி நகர ஆரம்பித்தது. தங்களுடைய பயண விதி முறைகளை சொல்ல, அம்மா மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டு இருந்தாள். நீ  ஒண்ணும்  பயபடாதே அம்மா, இதெல்லாம் சும்மா ஒரு சேப்டி பரிகாஷன்ஸ் தாணு சொல்ல, எனக்கு ஒன்னும் அதெல்லாம் இல்ல. ஒரு தடவ சரியாய் கவனிச்சா போதும்,,அதான்... பிலைட்ல போற எல்லாரும் அந்த விதி முறைகளை கண்டு கொள்வது இல்ல, தெரியவும் தெரியாது. runwayஇல் வேகமாய்  போய் வானத்தில் மிதந்தது. எங்கள் இருவர் முகத்தில் ஒரு வித சந்தோசம், அம்மா என் கைய சந்தோசத்தில் பிடித்து கொண்டாள்.அம்மா தன் வாட்ச் பார்த்து மணி 8 ஆகப்போவுது. ஏதாவது சாப்பிட கொடுப்பங்களை இல்ல நம்மளே பார்த்துக்க வேண்டியதுதானா. இல்லேன்னா ரெண்டு இட்லி மொளகாய்பொடி தடவி வச்சிருக்கேன் சாப்பிடறயான்னு கேட்டாள். sandwich வேணுமான்னு ஏர்ஹோஸ்டஸ் மாதிரி உபச்சாரம் வேற !!. அம்மா... இன்னும் பத்து நிமிஷத்தில பெங்களூர்ல லேண்ட் ஆகப்போறோம் ன்னு  சொல்ல அம்மாவுக்கு சொல்லமுடியாத ஆச்சர்யம் கூடவே இன்னும் கொஞ்ச நேரம்தானே இருக்கு என்கிற வருத்தம் வேற.

அடுத்தது , பெங்களூரு செக்மெண்ட.plane லேண்ட் ஆகி இறங்கவேண்டிய நிலையில் நின்றது. உடனே எல்லோரும் தப தப என்று அறிவிப்பை கேட்க்காம தங்களுடைய luggae எடுக்க முனைந்தனர். அம்மாவின் முகம் மீண்டும் அருவருப்பை காண்பித்தது. ஒரு வழியாக இறங்கி மீண்டும் பெங்களூரு  சொர்க்கலோகம். ஜிலு ஜிலு குளு குளு. luggage கைலேயே இருந்ததாலே நேர வெளியே வந்தோம். அம்மாவிற்கு மீண்டும் சந்தோச அதிர்ச்சி. உமாவும், குழந்தை தர்ஷனும் நேரில் வரவே அம்மாவுக்கு ஒண்ணுமே புரியல.அதை விட எனக்கும் சேர்த்து இன்னும் ஒரு surprise நடந்தது,
நான் டாக்ஸி புக் பண்ணலாம்னு டயல் பண்ணும்போது, உமா டாக்ஸி எல்லாம் ஒண்ணும் வேண்டாம், நம்ப வீட்டு காரிலே போலாம் வாங்கன்னு சொல்லி கார் பார்க்கிங் நோக்கி வேகமாக போக ஆரம்பித்தாள். நீங்க இங்கேயே இருங்க.. நான் கார் கொண்டு வரேன்னு சொல்லிட்டு போய்ட்டா. எங்க ரெண்டு பெரு முகத்திலும் ஆச்சரியம் மற்றும் பெருமையும் கூட.  ஒரு பத்து நிமிடத்துல எங்களை ஒரசினாப்போல ஒரு புது சிகப்பு நிற டொயோட்டா கார் வந்து நின்றது, வாங்க அம்மா, ராஜு ஏறுங்க கார்ல னு சொன்னாள்  உமா. இது என்னடி, நீ எப்போ கார் வங்கினே, எப்போ ஓட்ட கத்துக்கிட்ட  ஒண்ணும்  சொல்லவே இல்லையேன்னு மீண்டும் சந்தோச புலம்பல்.

ராஜுவின் மனம் ரொம்பவும் சநதோஷ பட்டது. ஒரே சமயத்தில் அம்மாவிற்கு இரண்டு சந்தோச செய்திகள்.

********************************************************************************

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்












Monday, May 21, 2018

என்று தணியும் இந்த....

     என்று தணியும் இந்த....

இந்த கதை ராஜுவின்  வாழக்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவம். சி நே சி ம,,இது என்ன புதுமாதிரியான வார்த்தை ஜாலம்..? ஒண்ணும்  இல்ல ..பிரபல தமிழ் கதா ஆசிரியர்  அவர்களுடைய சினிமாவான சிநேரங்களில் சினிதர்கள் தான் இந்த கதையின் உட்கரு. இக் கதையில் வரும் உண்மை பெயர்கள் மாற்றப்பட்டு  இருக்கின்றது. வாங்க...கதைக்கு செல்வோம்..

இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு 35-40 வருடங்கள் இருக்கும்..உடனே ராஜுவிற்கு  இப்போ என்ன வயசு இருக்கும் அப்படிங்கற சந்தேகம், விடுங்க,..அது இப்போ ரொம்ப முக்கியம் இல்ல ...அப்போ ராஜு  ஒரு MNC கம்பெனில கம்ப்யூட்டர் ஆபரேட்டராக  இருந்தான. மூன்று ஷிபிட் இருக்கும். நல்ல ஜாலியாக இருக்கும். வேலையும் இன்டெரெஸ்டிங்கா இருக்கும். எல்லோரும் போட்டி போட்டுகொண்டு வேல செய்துகொணடே ஒருத்தரை  ஒருத்தர் கலாய்ச்சிகிட்டே இருப்பாங்க. அந்த காலம் ரொம்பவும் இனிமையான இளமை காலம். எல்லோரும்ம் போட்டி போட்டுகொண்டு வித விதமா டிரஸ் செய்துகொண்டு லைப் ஈஸியாக எடுத்துக்கும் வயசு. கைல காசு, பைக்,,அப்புறம் என்ன..மிகவும் சந்தோஷமான மறகக்க முடியாத  நாட்கள்..

இப்பிடியாக நாட்கள் போகும் போது  புதுசா ஒரு பெங்களூரு  பையன் வந்து சேர்ந்தான். சென்னை வந்தி இறங்கிய  புது மோஸ்தர். பேரு  ஆகாஷ் . ஸ்டைலா ஷாம்பு போட்ட ஸ்டெப் கட்டிங் வேற , பெல் bottom pant . சக சீனியர்ஸ்  ஸ்டைல் எல்லாம் தூக்கி அடிக்கிற  மாதிரி ஸ்மைல்  அப்புறம்   colorful ஷர்ட்..young  அண்ட் energeticகா  இருந்தான். உடனே ராஜுவுக்கு  அவனை பார்த்ததும் பிடித்தது..டெய்லி அவன்  கிட்ட, தெரிஞ்ச  கன்னடத்தில் பேச  ஆரம்பிச்சான் ..(பெங்களூர்ல ஒரு வருஷம் கம்ப்யூட்டர் ட்ரைனிங் போனதுல கெடச்ச  லாபம் இந்த கன்னட மொழி)..ஆனா  anti  கிளைமாக்ஸ்ah ஆகாஷ்  கன்னடத்தில் பேசாம, இவன்கிட்ட   கிட்ட ஹிந்தில பேச ஆரம்பிச்சான்..என்னடா இது நம்ப weak சப்ஜெக்ட்ல கை  வைக்குறானே ..என்ன பண்றது..ஆனா  ராஜுவிற்கு  அவனை பிடிச்சிருக்கு...என்ன செய்ய,,உடனே இங்கிலீஷில பேசி பார்த்தான். செம்மயா ஆகாஷ் மாட்டினான்..ராஜுவின் நல்ல  வேளை , அவனுக்கு  ராஜுவின் இங்கிலீஷ்  சரியாய்  புரிய, அவனும்  இங்க்லிஷ்ல  பேச ஆரம்பிச்சான்..ராஜுவிற்கு  அவன் போட்டுஇருக்கிற ஷர்ட், பாண்ட் மேலதான் ஏழாம் வேற்றுமை உருபு .. "ஐ" (eye  !!)  அதான்  "கண்"...எப்போதோ தமிழ் grammer கிளாசஸ்ல அரை குறை தூக்கத்திலே கேட்ருக்கான் ..இந்த pant , shirt எல்லாம் எங்கே  வாங்கி இருப்பான்ன்னு ராஜூவிற்க்கு  ஆயிரம் கேள்விகள். ராஜுவிற்கு  யாரவது நல்ல டிரஸ் பண்ணி இருந்தா அவனை கப்புனு friend பிடிச்சிக்குவான்.  ராஜூவை அவன்  ஆபீஸ்ல Raymond டிரஸ் விளம்பர மாடல் மாதிரி இருக்கான்  அப்பிடின்னு சொல்லுவாங்க..அப்பிடி இருக்கும்போது ஆகாஷ்  அவனுக்கு சரியான போட்டி ..படி படியாக  அவங்க  நட்பு வளர்ந்து இணை பிரியாத நண்பர்களாக ஆனாங்க . ஆகாஷ், ராஜு வீட்ல  அடிக்கடி வந்து தங்க ஆரம்பிச்சான். வீட்ல இருக்கிறவங்களுக்கும் அவனை ரொம்ப பிடிச்சி இருந்தது . ஆகாஷை  அவன்  ஷிபிட்க்கு ராஜு மாத்திக்கிட்டான் . ரொம்ப குஷியா இருந்தது ராஜு மனசுக்கு. so , வீக்லி off  வரும்போது ஆகாஷ் ஸ்விம்மிங் கத்துக்கணும்னு ஆசை பட்டான். எல்லாருமாக சேர்ந்து மரீனா ஸ்விமிங் நீச்சல் குளத்துக்கு  போக ஆரம்பித்தோம். ஆகாஷுக்கு நீச்சல் தெரியாது. ராஜு  தான் கத்துக்கொடுக்கணும்னு ரொம்ப அன்பு தொல்லை வேற. சரின் னு சொல்லி அவன் செலவில் ரெண்டு ஸ்விமிங் ஷார்ட்ஸ் வாங்கி நீச்சல் கிளாஸ் ஆரம்பமானது. நீச்சல்  கத்துகிறதுல ரொம்பவும் ஆர்வம் கா காட்டினான். கொஞ்சம் நாள் ஆக  ஆக , குருவுக்கு மிஞ்சின சிஷ்யனாகிவிட்டான். ராஜு  பத்து அடி போறதுக்குள்ள ஆகாஷ்  15 அடி  தூரம் போயிடுவான். எப்போதும்  எல்லாரும் சேர்ந்து தான்  போயிட்டு  பக்திலுள்ள  புஹாரி ஹோட்டல்ல டீ , கேக் எல்லாம் சாப்பிட்டு ( ஆகாஷ்  செலவு தான்) திரும்புவாங்க  .

இப்பிடியாக அவங்க  லைப் ஆனந்தமா போயிற்றுக்கும்போது  ஒரு நாள், ....வாழ்க்கைல மறக்க முடியாத அந்த நாள் வந்தது....அன்னிக்கின்னு பார்த்து ஆகாஷுக்கு  off  போட்டுட்டாங்க. தனியா வீட்ல போர் அடிக்கும்  ராஜு  இல்லாம, அப்படினு சொல்லி ஸ்விமிங் தான் தனியா போகட்டுமான்னு கேட்டான். ராஜூவும் சரின்னு  சொல்லிட்டான் . ராஜு  தனியா மார்னிங் ஷிப்ட்ல வேலை செய்து  கொண்டிருந்தான் , ஒரு two hours கழித்து போலீஸ் ஸ்டேஷனிலேந்து ராஜுவிற்கு  போன் கால் வந்தது. ராஜுவிற்கு  ஒன்னும் புரியல. போன்க்கு   அந்த பக்கத்திலேந்து, சார்  ஒரு dead body மரீனா ஸ்விமிங் குளத்திலே கண்டெடுத்தோம். அவரு pant பாக்கெட்ல ஆபீஸ் கம்ப்யூட்டர் ரூம் நம்பர் இருந்தது. அதா உங்களுக்கு போன் பணறேன்னு   சொன்னாரு. ராஜுவிற்கு  கையும் ஓடல காலும் ஓடல. அப்பிடியே எல்லாரும் ஜெனரல் ஹாஸ்பிடல் ஓடி போய் ராயப்பேட்டை mortuaryla பார்த்தோம். ராஜுவின்  உடம்பு  ரத்தம் அப்பிடியே உறைந்த்து போச்சு. ராஜுவின்  உயிர் நண்பன் ஆகாஷ் தான் அந்த body . எப்பிடி இந்த விபத்து நடந்தது என்று விசாரிக்கும் போது ஆகாஷ் ஸ்விம் ககுளத்திலே  யரும் இல்லாத நேரத்தில டைவிங் ட்ரை பண்ணிருக்கிறான். ஆகாஷுக்கு  சுத்தமா டைவிங் தெரியாது. அவனுடைய  ஆர்வ கோளாறு. அவனை  கொன்று விட்டது..ஐயோ. ராஜுவால்  தாங்க முடியல. மேற்கொண்டு ஆக  வேண்டிய எல்லா பொறுப்பையும் தானே  ஏற்றுக்கொண்டு ஆகாஷ் பாமிலிக்கு போன் போட்டு இந்த துக்க செய்தியை சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து வரும்படி சொன்னான் . அதுவரை body mortuaryla வைக்க ஏற்பாடு செய்தான் . அவனுக்கு  உறு  துணையாக ராஜுவோட வேலை செய்யும்   பிரிண்ட்ஸ் மற்றும்  அண்ணா முதலியோர் இருந்தார்கள்.

இப்போது கதை எப்பிடி போகுதுன்னு பார்ப்போம். ஆகாஷின் வீட்டு மக்கள் மலை 6 மணிக்குள்  வந்து விடுவதாக கூறவே மற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தான்  ராஜு.. நண்பன் விபரீதமாக  இறந்த துக்க சம்பவம் அவனை ரொம்பவும் வாட்டியது . ராஜுவின்  அண்ணா மற்றும் நண்பர்கள் மேற்கொண்டு ஆக  வேண்டிய காரியத்தில் ரொம்பவும் பிஸியாக இருந்தாங்க. அவனுக்கு மட்டும் ஒரு வித சொல்ல முடியாத மன வேதனை. ஆகாஷுக்கு ஸ்விமிங் கத்துக்கொள்ள தான்  காரணமாக இருந்தோமேனு  என்று நெஞ்சு பதறியது. மாலை 6 மணிக்கு நுங்கம்பாக்கம் மயானத்தில் உடல் தகனம். நேரம் கடத்த கூடாது என்பதற்காகவும் மற்றவர்கள்  இறந்தவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்  கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் மட்டும் அன்று மேற்கொண்டு மூட பட்டு எல்லோரும் மயானத்தில் கூடுவதாக ஏற்பாடு .

இது கிளிமாஸ் கட்டம். 5 மணிக்கு bodya  மயானத்திற்கு ஆம்புலன்ஸசில கொண்டு செல்லப்பட்டது. எல்லா ஏற்பாடுகளும் நன்றாகவே  செய்யப்பட்டு இருந்தது. சரியாக 6 மணிக்கு ஆகாஷ் வீட்டிலிருந்து தந்தை மற்றும் 3 brothers எல்லோரும் வந்தார்கள். அவர்களை கண்டவுடன் துக்கம் தாளாமல் ராஜு , இங்கிலீஷ்லேயும் , கன்னடலத்திலேயும் நடந்ததை  சொல்லி அழுதான் . அப்போது தான்  கொஞ்சமும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. உங்களால் யூகிக்கவே முடியாது. ஆகாஷின் brothers எல்லோரும் அவன் உடலை கட்டி கொண்டு அழ ஆரம்பிக்க,  தந்தை மட்டும் ஒரு மூலைக்கு  சென்று கை  கால்கள் ஒரு மாதிரியாக நடுங்க கீழே விழுகிற மாதிரி இருந்தார். முகம் ரொம்பவும் வெளிறி போய்  விகாரமாக இருந்தது. எனக்கு ஒண்ணுமே புரியல. ஐயோ பாவம், புத்திர சோகம் போல..பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவரு அப்போ அப்போ குடிக்க தண்ணி வேணும் போல கையை காண்பிக்கவே நா ஒரு பாட்டில் வாட்டர் கொடுத்தேன். அதை அவர் தள்ளி விட்டு மீண்டும் அதே சைகை காண்பித்தார். இதை கண்ட அவரது மூத்த மகன் , என்  காது கிட்ட வந்து ஒரு சில வார்த்தைகள் கன்னடத்தில் சொன்னாரு.அத கேட்டு நான் உறைஞ்சு போய்ட்டேன். அது என்ன என்றால்  அவர் அப்பாவுக்கு ரொம்ப குடி பழக்கம் உண்டாம். இந்த மாதிரி நேரத்தில  இப்பிடித்தான் டென்ஷன் ஆகிடுவாராம். அதுக்கு மருந்து எப்போவுமே ஒரு கட்டிங் கைல வெச்சுஇருப்பாராம் !!. எப்பிடி!! .அந்த பையன் மேல சொன்னான்..வர அவசரத்தில் அவரு வாங்கலியாம்.."illi, yelli sikathe re, drinks nu" (இங்க எங்கேய பாட்டில் கிடைக்கும் னு ) கேட்ட  எனக்கு தலையே சுத்தியது. மேலே என் பதிலுக்கு காத்திராமல் ஒரு பிரதர் வெளியே வேகமாக ஓடி ஒரு பத்து நிமிடத்தில் கையில் பாட்டில்  பிளஸ் ஒரு பாக்கெட் சிகரெட்டு சகிதம் வந்து அவரிடம் கொடுத்தான் . உடனே தந்தை அந்த பாட்டிலின் மூடியை திறந்து அப்பிடியே ஒரே மூச்சில் முழுவதையும்  குடித்துவிட்டு வாயில் சீக்ரெட்டையும் பற்ற வைத்தார்.  மிகுந்த போதையால் அவர் அப்பிடியே சாய்ந்து விட்டார். எல்லார் முன்னாடியும் ரொம்ப கேவலமாக நடந்துகொண்டார். வாய் வேறு எது கன்னடலத்தில உளறி கொண்டிருந்தது. இப்பிடி ஒரு குடி பழக்கமா? இப்பிடி ஒரு தந்தையா !! இப்பிடி ஒரு குடும்பமா !!  ராஜுவுக்கு ஓரு பக்கம் பயங்கர கடுப்பும் மற்றொரு பக்கத்தில அவன் friend கிடப்பதையும் பார்த்து நொந்து போனான். ச்ச ...இப்பிடி ஒரு குடும்பத்தில இப்பிடி ஒரு நல்ல பையனா ? மேற்கொண்டு ராஜுவிற்கு, ஆகாஷின் வீட்டு மக்களை பார்க்க   பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து போய தன் நண்பனுக்கு செய்ய வேண்டிய கடைசி கால கடமைகளை தானே முன்னிருந்து செய்தான்.  தன நண்பனை நினைத்து மிகவும் வருந்தி மனதார அவன் ஆத்மா சாந்தி அடையுமாறு வேண்டிக்கொண்டான் .

என்ன விசித்திர  உலகமடா இது???!! ஒரு பக்கம் பிள்ளை தண்ணியில் தெரியாமல் விழுந்து  இறந்தான்... மறு  பக்கம் தந்தையோ தண்ணி இல்லாமல் இறந்துடுவாரு போல இருக்காரு . what an irony of life..!!!ராஜு மனசு ரொம்பவும்  நொந்து போனது. ஒரு முடிவுக்கு வந்தான்.

அன்றிலிடுந்து இன்று வரை நண்பர்கள் யாராவது ரொம்ப குடித்தார்களானால் அவர்களிடம் போதை தெளிந்த பிறகு ஆகாஷின் தந்தை கதைய விவரமாய் சொல்லி அவர்களை குடி பழக்கத்தை கை  விடுமாறு கேட்டுக்கொள்வான். இது, தான் ஆகாஷுக்கு செய்யும் கடமையாகவும், சமூகத்திற்கு  தன்னால் முடிந்த சிறு சேவையாக  ராஜு இன்று வரை செய்து  வருகிறான்.

********************************************************************************


- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்





















Saturday, May 19, 2018

ராஜுவின் Balcony காய்க(கனவுகள்)னிகள்

ராஜுவின் Balcony காய்க(கனவுகள்)னிகள் 

சின்ன வயசுலேந்தே ராஜுவிற்கு  gardening ரொம்ப பிடிக்கும்.  யார்  வீட்டுக்காவது  போகும் போதெல்லாம், அவன்   கூட வருவாங்க வீட்டுக்குள்ள போவாங்க, ஆனால் அவன்   மட்டும் வீட்டை சுத்தி ஏதாவது  செடி இருக்கானு பார்க்கப்போவான் . அப்பிடி ஒரு செடி பைத்தியம். அதோட இல்லாம எந்த செடியாவது seeds  கூட   இருந்தா  அத அப்பிடியே யாருக்கும் தெரியாம தன்  பாக்கெட்ல போட்டுருவான்  . இதுல  என்ன கூத்துன்னா , சீட்ஸ் பாக்கெட்ல போட்டது மறந்து போய் மறு நாள் துணி தோய்க்கும் போது தான்  குட்டு  வெளிப்படும். அவன்  pant  துணி பாழாபோனதுமில்லாம கூடவே அவன்   தோட்ட கனவும் சேர்ந்து போனது. இது போறாதுன்னு அவன்  அம்மா, "என் பிள்ளை கை  ரொம்ப ராசியான கை. அவன்  எந்த செடியோ இல்ல விதையோ வெச்சா நல்ல  வளரும்" அப்படினு  சொல்ல  ராஜுவிற்கு பெருமை பிடி படல .

இப்போதெல்லாம் எங்கே காம்பௌண்டோட வீடு இருக்கு ?. எல்லாம் அப்பார்ட்மெண்ட்ஸ் தானே . ஆனாலும் இவ்வளவு வயசு ஆகியும்  செடி வளர்ப்பில  அவனுக்கு தீராத காதல், so அதனால அவன்  வீட்ல இருக்கிற 3'x 4' அளவே உள்ள  அபார்ட்மெண்ட்balcony அவன் கண்ணை உறுத்த ஆரம்பித்தது. ஏதாவது உறுப்பிடியான kitchen கார்டன்  போடலாம்ணு வீட்ல head of  the  departmentக்கு மொதல்ல approval கேட்டான்,  ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு அரை மனசோட உறுப்பிடியா காய்கறி ஏதாவது போடுங்க பரவாயில்ல . சும்மா இந்த crotons அப்புறம் வாசனை இல்லாத பூச்செடி இதெல்லாம் போடாதீங்க. அப்புறம் தண்ணி ரொம்ப செலவாகாத vegetables  வேண்டுமான போட்டுக்கோங்க அப்படினு sanction ஆனது . அப்பிடின்னா பிளாஸ்டிக் செடி தான்,   வைக்கணும்னு முணுத்துக்கொண்டு திரும்பி பார்த்தான் . நல்ல வேளை  பாஸ் டிவியோட  ஐக்கியம் ஆகிட்டாங்க.

இதுதான் நல்ல சமயம். உடனே கார் எதுக்கிட்டு Ecr   ரோடுக்கு கிளம்பினான் . மனசுக்குள்ள எப்பிடியும் ஒரு 20 தொட்டி , கொஞ்சம் உரம் அப்புறம் கம்போஸ்ட் எல்லாம் வாங்கணும்னு லிஸ்ட் போட்டு ஒரு 500 ரூபாயை பாக்கெட்ல போட்டு நீயும்  வரையான்னு அவன் wife  பார்த்து சும்மா    கேட்டான் . அய்ய, எனக்கு அப்பிடி ஒண்ணும்  இண்டெரெஸ்ட் இல்லைன்னு டிவி சொன்னது. நமக்கு இது தானே வேணும். தன்   இஷ்டத்துக்கு  எது வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு மணி ஆகும் ஒன்னும் கவலைபடாதே சொல்லிட்டு அவ பதிலுக்கு காத்திராமல்   மின்னல் ஸ்பீட்ல வீட்டை விட்டு ராஜு வெளியேறினான் , இந்த செடிகள் நர்சரி தோட்டம் எப்பவோ மஹாபலிபுரம் போகும் போது  பார்த்தது , சரி, போற வழிலே பார்த்துக்கலாம் நினைச்சி ECr ரோடு டிராபிக்குள்ள கார் ஓட்டிக்கொண்டே போனான் . டிராபிக் வேற ரொம்ப இருந்தது. இந்த தோட்டம் எல்லாம் எங்கே இருக்குனு சரியாய் வேற தெரியாது. ஒரு 20 km பொய் இருப்பான் , திடீரென அவன்   காருக்கு ஒரேடியா  நெஞ்சு வலி வந்து மூச்சு  முட்டி நின்று விட்டது.  என்னடான்னு பார்த்தா பெட்ரோல் காட்டி முள் ஒரேடியா படுத்துகிச்சு. பெட்ரோல் காலி..உடனே யோசிக்காம கார் ஓரம் கட்டிட்டு ஏதாவது லிப்ட் கிடைக்கும்னு வெயிட் பண்ணும் போது ஒரு டப்பா sccoty வர .. thumps up காட்டினான் . நல்ல வேளை ஒரு 100 அடி தள்ளி வண்டி நின்றது.  பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க் போய் பெட்ரோல் கேன் சகிதத்தோட மீண்டும் thumpsup...  ஒரு பயங்கர ஓட்ட லாரி பிடித்து கார் வந்து சேர்ந்தான் . கையிலிருந்த 500ல  ஒரு 200 பெட்ரோல் ;போட்டுட்டு மீதம் 300 செடி ஷோப்பிங்க்காக பத்திரமா புத்திசாலித்தனமா வெச்சுருந்தான் . இந்த சமயம் பார்த்து அவன்   மனைவிக்கு மூக்கிலே வேர்த்தது  போல..மொபைல் போன் ரிங் ரிங்..எப்பிடி சமாளிக்க..நடந்ததை சொன்னா  situation worst ஆகும்னு தெரியும். உடனே இங்கே தோட்டத்தில ரொம்ப கூட்டம் , இன்னிக்கு சண்டே இல்லே..ரொம்ப கூட்டம்  போல.sale  வேற போட்டிருக்காங்க னு ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்தான்  . ஒரு வழியாக தோட்டத்தை  கண்டுபிடிதத்தான் . கார் டாஷ்போர்டுல பார்த்தா  35 கி வந்து இருக்கான் . சரி இப்போ நாம வாங்க வேண்டிய items  லிஸ்ட் மொபைல் போன்ல இருக்கு. அப்புறம் என்ன. அவனை பார்த்த  தோட்டக்காரனோட  ஏழாம் அறிவு ரொம்ப பெரிய  பார்ட்டி மாட்டி இருக்குனு  சொன்னது போல. உடனே ரொம்ப  பவ்யமா அய்யாவுக்கு என்ன வேணும் சார்...இது வேணுமா, அது வேணுமா அப்பிடின்னு  மாறி  மாறி உபசரித்தான். ராஜுவிற்கு   தலை  கால் புரியலை. அவன்  லிஸ்டில் இருந்த items  எல்லாம் படித்து இதெல்லாம் உன்கிட்ட இருக்கானு கேட்டான் . தோட்டக்காரன்  கணக்கு பிரகாரம் இந்த items  எல்லாம் வெறும் சப்பை போல. இதெல்லாம் ரொம்ப சீப் சார். இத பாருங்க காஷ்மீர் ரோஜா  , இத வேணுமா அஜம்மெர் ரோஜா அப்படினு விதம் விதமா  நெறய செடி தொட்டியை கட்டினான் . உடனே ராஜுவின் சுய கவுரவம் அவனை  ஒரு உசுப்பு உசுப்ப, சும்மா அந்த அஜ்மீர்   என்ன விலைனு கேட்டான் . டிஸ்கோவுண்ட் போக , ஒரு செடி 250 ரூபா தான் சார். அடிவயத்துல பகிர் னு ஒரு பீலிங். நம்பகிட்ட  கேவலமா வெறும் 300 மட்டும் தானே  கைல இருக்கு, எப்பிடி இவளவு items  வாங்கறதுனு ஒரு பயங்கர  மனக்குழப்பம் வேற. எப்பிடியோ  சுதாரிச்சிகிட்டு இதெல்லாம் எனக்கு வேணாம்,,இந்த லிஸ்ட் item  மாத்திரம் தனியா எடுத்து  வெச்சு பில் போடுங்கன்னு  சொன்னான் . உடனே சரி சார் னு சொல்லி, அவன் அசிஸ்டண்ட் கிட்ட  சொல்லி மாயமாய் மறைந்து அடுத்த sound  பார்ட்டிய கவனிக்க  போனான். ஒரு வழியா பில் வந்தது. ஒண்ணும்  புரியாத தமிழ் பாஷயைல கிறுக்கி மொத்தம் 20 items இருந்தது. ராஜுவின் கண்ணு மொத்தம் எவ்வளவு damageன்னு கடைசி item வரைக்கும் தேடி  அப்புறம் பின் புறம் மீதி continue ஆக  மொத்தம் 4500 இருந்தது. இது என்னடா பிள்ளியார்  பிடிக்க குரங்கு  வந்த கதையா ஆனதேன்னு   ரொம்ப பீலிங் வேற. சரி இப்போ situation எப்பிடி சமாளிப்பதுனு யோசிச்சு கொஞ்சம் இருங்க, வீட்ல கேட்டு எது வேணும்னு கேக்கறேன் சொல்லி அவன்கிட்ட ஒரு அல்ப பொய் சொல்லிட்டு கொஞ்சம் தள்ளி போயி  மொபைலை பேசுறமாதிரி ஆக்ட் செய்ய வேண்டியதாச்சு. தோட்டக்காரன்  எப்போ இந்த பார்ட்டி வீட்ல கேக்குதோ அப்போ எதுவும் வாங்காதுனு முடிவு பண்ணிட்டான் போல.
இந்த பலகணி கார்டன் ரொம்ப கைய கைடிக்கும் போல இருக்கே, அதே சமயம் ஆசை விடல. ஒரு பக்கம் பொண்டாட்டி உருவமும் இனொரு பக்கம் கேவலமா அவனை  பாக்கும் தோட்டக்காரன் ஜர்தா போட்ட முகமும்    தமிழ் சீரியல்ல  வர மாதிரி மாறி  மாறி focus  ஆகிட்டே  இருந்தாங்க. சரி , இப்போ ஒரு முடிவுக்கு வந்தாகணுமே..என்ன செய்ய..நிலைமைய  சமாளிச்சு சீக்கிரம் வெளியேறனும்..ஒடனே கிரெடிட் கார்டு வாங்குவீங்களானு கேட்டான் . எப்பிடியும் அவன் வாங்க மாட்டான்  என்கிற நம்பிகை தான்  வேற என்ன. இல்ல சார் என்று  சொன்னான் ...ராஜு  முகத்தில வெற்றி புன்னகை..அப்போ சரிப்பா..நா இங்க தான் பக்கத்தில இருக்கேன்,,,இன்னும் அரை மணியில வந்துடுவேன்னு..காசு கொண்டுவரேன்  சொல்லி நழுவ பார்த்தான் ...உடனே அவன் அட்ரஸ் கொடுங்க சார்,,நான் நேர வந்து கேஷ் வாங்கிக்கிறேன் னு சொல்ல, இது என்னடா வேண்டாத வம்பு..நல்ல மாட்டிக்கினோமே அப்பிடின்னு நினைச்சான் ,,மேல அவன் இல்லேன்னா ஒண்ணு  பண்ணுங்க சார்,  உங்க கிட்ட paytm அக்கௌன்ட் இருக்கானு கேட்டு மேலும் அவனை  இக்கட்டான நிலமைல கொண்டு விட்டான்,,  அவன் மொபைல் நம்பர் வேற கொடுத்தான்..இல்லேப்பா மொபைலில் சார்ஜ் இல்லே னு சொல்லி அங்கிருந்து வில்லில் இருந்து விட்ட அம்பு மாதிரி சர்ருனு கார் கிட்ட பாய்ந்தான் . அவ்வளவு தான் ..அடுத்த அரைமணியில் ராஜு  வீடு வந்து சேர்ந்தாச்சு..

இப்போ வீட்டுக்   காட்சி..என்னங்க வெறும் கையோட வந்துட்டீங்க,,ஒண்ணும்  வாங்கலியா ??!!...இவ்வளவு  நேரமா  என்ன பண்ணினீங்க ..அப்பிடின்னு சரமாரியா  கேள்வி கணைகள்..உடனேயே ராஜு மனசில ரெடியா வச்சிருந்த புத்திசாலியான  பதில் விட்டான் ..நீ இல்லாம என்னால எதுவும் decide  பண்ண முடியல...நெறய variety  வேற...அடுத்த  தடவை நம்ப ரெண்டு பெரும் ஜாலியா ஒரு டிரைவ் போய்ட்டு செடி வாங்கிட்டு வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்னு நெனச்சேன்னு ஒரு சூப்பர் சீன் போட்டான் ,,சரி சரி ..குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்..பசிக்குது னு சொல்ல ஒடனே என்னமா சமாளிச்சிட்டோம்னு நினைச்சுகிட்டே  பெருமையா balcony இல்  இருக்கிற towel எடுக்க போனேன்,,,

அங்க தான்  அவன் விதி அவனை பார்த்து ஏளனமாக சிரித்தது. ஆமாங்க...  ...ஒரு 15 பூந்தொட்டி , அதில வித விதமா செடி, ரோஜா செடி, அப்புறம் செம்மண் மூட்டை, உரமூட்டை சகிதம்  இருந்தது ..இதுஎல்லாம்  ஏ,,,,,து அப்பிடின்னு திரும்பி பார்த்து கேக்கறதுக்குள்ளே அவ,  ரோட்ல கூவிட்டு போனான்..நான்தா மொத்தமா ஒரு 500க்கு வாங்கினேன் சொல்லிகிட்டே, அவன்   முகத்தில வழியிற அசட்டு தனத்தை பாக்காமா  அவபாட்டுக்கு போய்ட்டா வழக்கம் போல ......ராஜுவின் பலகணி கார்டன் கனவு அவன் நினைத்ததை போல் பூத்து  காய்க்காமல், வெறும்  காய்ந்த சரகாக உதிர்ந்துப்போனது ..

*********************************************************************************

- எண்ணம் , எழுத்து,  ...ரவி சங்கர்